Don't Miss!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினிதான் அடுத்த முதல்வர் - திரையுலக பிரபலங்கள் பேச்சு
ரஜினியின் 62வது பிறந்த நாள் விழா நேற்று வள்ளுவர் கோட்டத்தில் வெகு பிரமாண்டமாக நடந்தது. கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் குவிந்து விட்டது. அனுமதி சீட்டு உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுப்பியும் சுமார் 10000 ரசிகர்கள் வரை குவிந்தனர். வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றியிருந்த மொத்த பகுதியும் ரஜினி ரசிகர்கள் மயமாகக் காட்சி தந்தது.
வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் பலவற்றிலுமிருந்து ஏராளமாக பணம் செலவழித்து ரசிகர்கல் வந்திருந்தனர்.
விழாவில் பேசிய அத்தனை பிரபலங்களும் சொல்லி வைத்த மாதிரி பேசியது,"தமிழகத்தின் அடுத்த முதல்வர் தலைவர் ரஜினிதான்," என்பதே. மூத்த இயக்குநர் எஸ்பி முத்துராமன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்பட அனைவரும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசினர். நிச்சயம் அவர் தனிக் கட்சி ஆரம்பிப்பார் என்று மன்ற நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதனால் உற்சாகத்தின் விளிம்புக்கே போய்விட்ட ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். ரசிகர்களின் மனநிலை புரிந்து போலீசாரும் அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டனர்.
விழாவுக்கு ரஜினி வருவார் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தனர். ஆனால் அவர் கடைசிவரை வரவில்லை.