கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார்.. ஆறுதல் சொன்ன தனுஷ்.. நெகிழ்ந்து போன சிம்பு
சென்னை: வாலு பட விவகாரத்தால் நொந்து போயுள்ள சிம்பவுக்கு போன் செய்து ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.
வாலு பட விவகாரம் சாதகமாக அமையட்டும் என்று நடிகர் தனுஷ் சிம்புவை வாழ்த்தி இருக்கிறார்.
"நான் சற்று முன்னர் STR உடன் போனில் பேசினேன், வாலு படம் இவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தும் கூட சிம்புவின் தன்னம்பிக்கை சற்றும் குறையவில்லை. முழுப் பிரச்சினையையும் பாசிட்டிவாகவே எடுத்துக் கொண்டுள்ளார். எனது நெருங்கிய நண்பா உன்னைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.
பதிலுக்கு சிம்புவும் "உங்கள் அன்பிற்கு நன்றி. மாரி படவெளியீட்டிற்கு எனது வாழ்த்துக்கள், கலக்குங்க" என்று பதிலுக்கு ட்வீட் செய்து இருக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications