Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் நியாயமாகவே நடந்து கொண்டேன்-ராம.நாராயணன் விளக்கம்
கலைஞர் டிவியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் ராம.நாராயணன், அதிமுக ஆட்சியைப் பிடித்ததுமே தனது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை விட்டு ஓடி விட்டார்.
தற்போது அவர் மீது ரூ. 15 கோடி மோசடி செய்துவிட்டதாகவும், ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டதாகவும், திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டதாகவும் தயாரிப்பாளர்கள் புகார் கூறுகின்றனர்.
தன் மீதான புகார்களுக்கு ராம.நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து வருடங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தலைவராக நான் பணிபுரிந்தது என்னுடன் இருந்த நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்.
120 சிறு முதலீட்டு படங்களில் பணியாற்றிய நான் எளிமையே வலிமை என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவன். எந்த காலத்திலும் திரை உலகில் நான் யாருக்கும் பாக்கி வைத்ததில்லை. நேர்மை தவறியதில்லை.
இது திரை உலகில் நான் பணியாற்றிய ஏவிஎம், கே. பாலச்சந்தரின் கவிதாலயா போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தெரியும்.
நியாயப்படி நடக்கும் என்னை சங்கத்தின் முன்னாள் தலைவரும் மற்றவர்களும் சங்கத்தில் 15 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என பொய்யான தகவலை கொடுத்து ஒளிபரப்பி வருகின்றனர்.
சங்கத்தில் வரவு-செலவு கணக்கு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதை மினிட்ஸ் புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
புதிதாக தலைவர் பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிர விசாரித்து உண்மை நிலையை எல்லோருக்கும் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் கிளம்பியுள்ள இந்தப் பூசல் எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை.