Don't Miss!
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மும்பை தொடர் குண்டுவெடிப்பு: நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுதலையாகும் சஞ்சய் தத்
மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நன்னடத்தை காரணமாக வருகின்ற மார்ச் மாதம் விடுதலை ஆகிறார்.
கடந்த 1993 ம் ஆண்டில் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்ட விரோதமாக ஏ கே 56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சஞ்சய் தத் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது சஞ்சய் தத் மகராஷ்டிராவில் உள்ள புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
கோர்ட் விதித்த தண்டனைக் காலம்படி அவர் நவம்பர் மாதம் (2016)வரை சிறையில் இருக்க வேண்டும். ஆனால் சஞ்சய் தத்தின் நன்னடத்தை காரணமாக அடுத்த வருடம் மார்ச் 7 ம் தேதி (2016) விடுதலை செய்யப்படவிருக்கிறார்.
சஞ்சய் தத் மட்டுமல்ல பொதுவாகவே ஜெயில் கைதிகளுக்கு நன்னடத்தை காரணமாக சிறை தண்டனை குறைக்கப்படுவது உண்டு என்று எரவாடா சிறை அதிகாரி பவார் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் தத் மார்ச் மாதம் விடுதலையாகும் பட்சத்தில் அவரின் தண்டனைக்காலம் சுமார் 8 மாதங்கள் வரை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் தத் விடுதலையாகும் இந்த செய்தி தற்போது ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.