Don't Miss!
- News ரூ.10 கோடி.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஆட்டோ டிரைவர்.. கடைசி நேரத்தில் வாங்கிய லாட்டரிக்கு பரிசு
- Technology ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஏரியில் மூழ்கி 2 நாட்கள் கழித்து கன்னட நடிகர் உதய்யின் உடல் மீட்பு
பெங்களூர்: பெங்களூர் அருகே உள்ள ஏரியில் மூழ்கி பலியான 2 கன்னட நடிகர்களில் ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
துனியா விஜய் ஹீரோவாக நடித்து வரும் கன்னட படமான மஸ்தி குடியின் கிளைமாக்ஸ் காட்சி பெங்களூர் அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு படமாக்கப்பட்டது.
விஜய், வில்லன்கள் அனில் மற்றும் உதய் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரியில் குதித்தனர். இதில் விஜய் மட்டும் நீந்தி கரை வந்தார். அனிலும், உதய்யும் நீரில் மூழ்கி பலியாகினர்.
அவர்களின் உடல்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் ஆகியோர் உள்ளூர் மீனவர்களின் உதவியோடு தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்று உதய்யின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
அனிலின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நீச்சல் தெரியாத அனில் மற்றும் உதய்யை நீரில் குதிக்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.