Don't Miss!
- News
அடிதூள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட செம அறிவிப்பு.. களமிறங்கிய சர்வதேச "டீம்".. சென்னைக்கு குட்நியூஸ்
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Lifestyle
கலோரிகள் குறைவாக உள்ள இந்த 7 உணவுகள சாப்பிட்டா... உங்க எடை டக்குனு குறைஞ்சிடுமாம்...!
- Technology
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
வாவ்.. 20 லட்சம் பேரா.. ரம்பாவிடமிருந்து பொங்கி வழிந்த நன்றி.. செம ஹேப்பியாம்!
சென்னை : 90களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் ரம்பா. கொஞ்சிக்கொஞ்சி பேசும் அழகாலும், தனது கவர்ச்சியாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு தன்வசப்படுத்தினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான கார்த்திக்,அர்ஜூன் , பிரபுதேவா, விஜய், அஜித்,ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல படங்களில் ரவுண்டி கட்டி நடித்துள்ளார்.
'நம்ம ரம்பா சார்..' குழந்தைகளுடன் 'அழகிய லைலா'வின் அசத்தல் போஸ்! லைக்ஸ் அள்ளும் க்யூட் போட்டோஸ்!

தொடை அழகி
பால்போன்ற தேகமுடைய ரம்பாவுக்கு தொடை அழகி என்ற பட்டத்தை கொடுத்து ரசிகர்கள் அழகு பார்த்தனர். சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகள் இருந்த போதே, சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் ரம்பா

அழகிய லைலா
1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் அழகிய லைலா பாடல் இன்று வரை அனைவரும் ரசிக்கும் பாடலாகவே உள்ளது.

திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை
2010ம் ஆண்டு இந்திர குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். திருமணத்திற்குபிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரம்பா, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். ரம்பாவுக்கு 2 மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.

நன்றி கூறிய ரம்பா
திரைப்படங்களில் தலைகாட்டவில்லை என்றாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரம்பா. இன்ஸ்டாவில் இவரை, 2 மில்லியன் பாலோவர்ஸ் பின் தொடர்ந்து வருகின்றார். இதற்கு நன்றி கூறும் விதமாக தமிழ், தெலுங்கு, இந்தி , ஆங்கிலம், கன்னடம் ,மலையாளம் என 6 மொழிகளில் நன்றி கூறியுள்ளார்.