Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தெரியுமா, ரஜினியின் 2.ஓ க்ளைமாக்ஸே எடுத்தாச்சு!
ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் மெகா பட்ஜெட் படமான 2.ஓ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ 350 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகும் எந்திரனின் தொடர்ச்சியான 2.ஓ படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த 45 நாட்களாக டெல்லியில் கடும் வெயிலுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதில் ரஜினி - அக்ஷய் மோதும் சண்டைக் காட்சிகள், எமி ஜாக்ஸன் - ரோபோக்கள் பங்கேற்கும் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டன.
இவைதான் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளைப் படமாக்குவது பெரும் சவாலாக இருந்திருக்கிறது ஷங்கருக்கும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கும். உயரத்தில் படம்பிடித்துக் கொண்டிருந்த ஒரு ஹெலிகேம் கீழே விழுந்து உடைந்துவிட்டதாம்.
ஆனால் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக ஷங்கர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
டெல்லி ஷெட்யூலை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளது படக்குழு. அடுத்து 10 நாட்களுக்கு செம்பரம்பாக்கம் அருகில் உள்ள ஈவிபி பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் படப்பிடிப்பு நடக்கிறது. டெல்லியில் எடுக்கப்பட்ட க்ளைமாக்ஸூடன் தொடர்புடைய காட்சிகளை இங்கு படமாக்கவிருக்கிறார்கள்.
அதன் பிறகுதான் வெளிநாட்டுக்குச் செல்வார்கள் என்று தெரிகிறது.