Don't Miss!
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜெயம் ரவி, சூர்யாவுடன் "முடிய"ப் போகும் 2015
சென்னை: ஜெயம் ரவியின் பூலோகம் ,சூர்யாவின் பசங்க 2 மற்றும் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ஆகிய படங்களுடன் இந்த வருடம் தனது வாழ்நாளை முடித்து கொள்ளப்போகிறது.
இந்த 2015 ம் ஆண்டு கோலிவுட்டில் வெளியான படங்களில் சுமார் 10% படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக மாறியிருக்கின்றன. இதில் வெற்றிகளை சுவைத்து கோலிவுட்டின் ஜெயமான நாயகனாக மாறியிருக்கிறார் ஜெயம் ரவி.
இந்த 2015 முடிய இன்னும் சரியாக 11 நாட்களே உள்ளன. இதில் கடந்த வாரம் தங்கமகன் திரைப்படம் மட்டுமே வெளியானது. இந்நிலையில் வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 24 ம் தேதி பூலோகம், பசங்க 2 மற்றும் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ஆகிய படங்கள் வெளியாகின்றன.
இதே தேதியில் வெளியாகவிருந்த விமலின் அஞ்சலை மற்றும் ரமேஷ் அரவிந்தின் வில் அம்பு ஆகிய திரைப்படங்கள் எதிர்பாராதவிதமாக தள்ளிப் போயிருக்கின்றன.
கடைசி நேரத்தில் இந்தப் படங்களில் ஒருசில மாறுதல்கள் ஏற்படலாம் எனினும் தற்போதைக்கு மேலே சொன்ன படங்கள் மட்டுமே வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன.
ஜெயம் ரவிக்கு ஏற்கனவே 2 படங்களின் மூலம் ஜெயம் கிடைத்து விட்ட நிலையில் சூர்யாவிற்கும் அது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.