Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கல்பனா, கலாபவன் மணி... தொடர் மரணங்களால் உறைந்து போன மலையாளத் திரையுலகம்
திருவனந்தபுரம்: 2016 ம் ஆண்டு ஆரம்பித்து முழுதாக 3 மாதம் முடியவில்லை. அதற்குள் 7 திரை நட்சத்திரங்கள் இதுவரை மலையாளத் திரையுலகில் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்த 2016 ம் வருடம் மலையாளத் திரையுலகின் இருண்ட காலமாக மாறிவிடுமோ? என்ற அச்சம் தற்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
கலாபவன் மணி உட்பட இந்த 3 மாதங்களில் இதுவரை இறந்து போன மலையாள நட்சத்திரங்கள் பற்றி பார்க்கலாம்.
கல்பனா (ஜனவரி 25)
நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனா(51) கடந்த ஜனவரி 25 ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இறந்து கிடந்தார். படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. 300 க்கும் அதிகமான படங்களில் நடித்துப் புகழ்பெற்ற கல்பனாவின் மரணம் இந்த வருடத்தில் மலையாளத் திரையுலகிற்கு நேர்ந்த முதல் இழப்பாக அமைந்தது.
ஷான் ஜான்சன் (பிப்ரவரி 5)
மலையாளப் பாடகியான ஷான் ஜான்சன் பிப்ரவரி 5 ம் தேதி அவரது அபார்ட்மெண்ட்டில் இறந்து கிடந்தார். ஒருபுறம் இருதயத்தில் ஏற்பட்ட அடைப்புதான் அவரது மரணத்திற்குக் காரணம் என்றும் மற்றொருபுறம் வலிப்பு நோயால் அவர் இறந்தார் என்றும் கூறுகின்றனர். ஆனால் இதுவரை அவரின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
ஓஎன்வி குருப் (பிப்ரவரி 13)
மலையாளத்தின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான ஓஎன்வி குருப்(84) பிப்ரவரி 13 ம் தேதி உயிரிழந்தார். 1989 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான வைஷாலி படத்திற்காக தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் ஓஎன்வி குருப் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ராஜாமணி (பிப்ரவரி 14)
மூத்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ராஜாமணி(60) கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி இறந்து போனார். 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு தனது இசையால் உயிரூட்டியவர் ராஜாமணி. தற்போது அவரது மகன் பி.ஏ.சிதம்பரநாத் மலையாளப் படங்களுக்கு இசையமைத்து வருவது வருகிறார்.
அனந்தக் குட்டன் (பிப்ரவரி 14)
இசையமைப்பாளர் ராஜாமணி இறந்த அதே நாளில் ஒளிப்பதிவாளர் அனந்தக் குட்டன்(61) இறந்து போனார். 150 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அனந்தக் குட்டன் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 14 ம் தேதி அவர் இறந்து போனார்.
ராஜேஷ் பிள்ளை(பிப்ரவரி 27)
பிரபல மலையாள இயக்குநர் ராஜேஷ் பிள்ளை(41) பிப்ரவரி 27 ம் தேதி கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் விட்டது, ராஜேஷ் பிள்ளையின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தது.
கலாபவன் மணி( மார்ச் 6)
இந்நிலையில் நேற்று பிரபல நடிகர் கலாபவன் மணி(45) கல்லீரல் பிரச்சினை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகையும் தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த வருடத்தில் இதுவரை 7 நட்சத்திரங்கள் உயிரிழந்திருப்பதால் மலையாளத் திரையுலகில் ஒருவித அச்ச உணர்வு தற்போது தொற்றிக் கொண்டுள்ளது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!