Just In
- just now
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 17 min ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 44 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
படம் எடுப்பதாக மோசடி: கைதாவாரா இயக்குநர் களஞ்சியம்?
திரைப்படம் எடுக்க பொதுமக்களிடம் பணம் வசூலித்துவிட்டு ஏமாற்றிய புகாரில் இயக்குநர் களஞ்சியம் கைதாகக் கூடும் எனத் தெரிகிறது.
பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும் போன்ற படங்களை இயக்கியவர் களஞ்சியம். இவர் திருவண்ணாமலை வாழைசித்தர் அறக்கட்டளை தலைவராகவும் உள்ளார்.
சீனிவாசன் என்பவருடன் இணைந்து சிவகுரு பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி என் உயிர் நீதானடி என்ற திரைப்படம் எடுப்பதாக பூஜை போட்டார்.
பின்னர் பணப் பற்றாக்குறை காரணமாக, இந்த திரைப்படம் எடுப்பதற்கு பங்குதாரர்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளனபர். இதை நம்பி 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தலா ரூ.50,000 பங்குத் தொகையாக சீனிவாசன் மற்றும் களஞ்சியத்திடம் கொடுத்துள்ளனர்.
ஆனால் சில தினங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியவர்கள், பின்னர் அதுபற்றி எந்த விவரமும் சொல்ல மறுத்து வருகிறார்களாம். பணத்தைத் திருப்பிக் கேட்டவர்களுக்கு அதைத் தராமல் இழுத்தடிப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே பாதிக்கப்பட்டவர்கள் இரு வாரங்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரின் பேரில் பட தயாரிப்பாளரான சீனிவாசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் இயக்குநர் களஞ்சியமும் தனது பங்குதாரர் என்றும், அவருக்கும் இதில் பங்குண்டு என்றும் கூறியதாகத் தெரிகிறது. எனவே களஞ்சியமும் கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.