TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
வனிதா வழக்கு-விஜயகுமார், மஞ்சுளா, அருண் கைதா?

விஜயகுமார்- நடிகை மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா. நடிகர் ஆகாஷை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்று, இப்போது ஆனந்தராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஆகாஷுக்கும் வனிதாவுக்கும் இரு குழந்தைகள் பிறந்தன. பின்னர் ஆனந்தராஜுடனான தாம்பத்யத்தில் ஒரு குழந்தை பிறந்தது.
இந்த மூன்று குழந்தைகளும் இப்போது வனிதாவிடமே உள்ளனர்.
குழந்தைகளுடன் கடந்த தீபாவளியன்று அப்பா விஜயகுமார் வீட்டுக்குப் போனார்கள் வனிதாவும் ஆனந்தராஜும். பண்டிகை முடிந்து கிளம்பும்போது முதல் இரு குழந்தைகளும் வனிதாவுடன் வர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே அவர்களை அங்கேயே விட்டுவிட்டுப் போகுமாறு விஜயகுமார் கூறியுள்ளார்.
ஆனால் குழந்தைகளை விட மறுத்துவிட்டாராம் வனிதா. இதில் வனிதா மற்றும் அவரது கணவர் இருவரும் விஜயகுமாருடன் சண்டை போட்டதாகவும் இதில் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்பா விஜயகுமாரும், அண்ணனும் நடிகருமான அருண்குமாரும், அம்மா மஞ்சுளாவும் தன்னையும் தன் கணவனையும் அடித்துத் துன்புறுத்தியதாகவும், அறையில் தள்ளிப் பூட்டியதாகவும் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் வனிதா. உடனே போலீஸ் தலையிட்டு குழந்தைகளை மீட்டுக் கொடுத்தது வனிதாவுக்கு. ஆனால் விஜயகுமார் தரப்பில் யாரையும் கைது செய்யவில்லை.
இந்நிலையில், விஜயகுமார் ஒரு புகார் கொடுத்திருந்தார் போலீஸில். அதில் மருமகன் ஆனந்தராஜ் தன்னை அடித்து கையை உடைத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதில் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வனிதா, நாந் கொடுத்த புகாரின் அடிப்படையில் என்னை அடித்த விஜயகுமார், மஞ்சுளா, அருண்குமாரை மட்டும் கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன், முதல்வரிடம் புகார் கூறுவதாகவும் முறையிட்டார்.
இப்போது வனிதா புகாரின் அடிப்படையில் விஜயகுமார், அவர் மனைவி மஞ்சுளா, மகன் அருண்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் மதுரவாயல் போலீசார். எனவே இம்மூவரையும் போலீசார் கைது செய்யலாம் என்று தெரிகிறது.