Don't Miss!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆசின் நடித்த படங்களை புறக்கணிப்போம்-உலகத் தமிழ் அமைப்புகள் அறிவிப்பு
உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் நாஞ்சில் பீட்டர், வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் பழனிசுந்தரம் ஆகியோர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள கூட்டறிக்கை
தமிழீழத்தில் நமது தொப்புள் கொடி உறவான தமிழ் இனத்தை சிங்கள அரசு கூண்டோடு ஒழித்து வருகிறது. தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்ட அனைவரையும் உலக நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கப்படும் நாள் தொலைவில் இல்லை.
இலங்கைக்கு நடிகர்கள் யாரும் போகக்கூடாது என்று தீர்மானம் போட்டுள்ள நடிகர் சங்கத்துக்கு உலகத் தமிழ் இனம் நன்றி தெரிவிக்கிறது.
தமிழர்கள் உணர்வுகளை துச்சமென நினைத்து இலங்கை சென்ற மலையாள நடிகை அசின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக தமிழ் அமைப்பு நடிகர் சங்கத்தை வலியுறுத்துகிறது.
அசின் நடித்த அனைத்து திரைப்படங்களையும் புறக்கணிக்க உலகத் தமிழர்கள் முடிவெடுத்துள்ளனர். அந்த முடிவை அமெரிக்கா, கனடா நாட்டில் நிறைவேற்றுவோம்.
தமிழ் உணர்வுடன் செயல்பட்டு வரும் ராதாரவி, சத்யராஜ் ஆகியோரையும் தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவு நல்கும் நடிகர் சங்கத்தின் மற்ற உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம்.
தமிழர்களுக்காக உழைக்கும் திரைத்துறையினர் யாவர், எதிராக உள்ளவர்கள் எவர் என்பதை ஆராய்வதுடன் யாருடைய படங்களை புறக்கணிப்பது என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் இருந்து வரும் திரைப்படங்களின் கணிசமான வருவாய் எங்களைப் போன்ற புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவால் ஈட்டப்படுகிறது.
கடந்த காலத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக திரைதுறையினர் நடத்திய போராட்டங்களை அலட்சியப்படுத்திய நடிகர்களின் படங்கள் புலம் பெயர் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டன. இதன் விளைவாக அத்திரைப்படங்கள் படுதோல்வியை தழுவின.
இதுபோல் தொடர்ந்து தமிழர் உரிமை குரலுக்கு எதிராக செயல்படுவோர் படங்களை புறக்கணித்து போராட்டங்களை மேற்கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
ஆசின் உள்ளிட்ட இலங்கை ஆதரவு திரைத் துறையினர் மீது உலகத் தமிழர்களின் குறிப்பாக, உலக நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் கோபப் பார்வையைத் திருப்பியுள்ளதால் இவர்களின் படங்கள் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரும் சிக்கல்களை சந்திக்கும் என கருதப்படுகிறது.