Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
லிங்கா முன்பதிவு தொடங்கிய 30 நிமிடத்தில் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!
சென்னை: ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
லிங்கா படம் ரஜனியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படம் உலகெங்கும் 5000க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.
தமிழகம் தவிர பிற பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.
சென்னை மற்றும் தமிழகத்தில் நேற்று மாலைதான் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு தொடங்கப்பட்டது (அபிராமி போன்ற அரங்குகளில் டிக்கெட் விற்பனை திங்களன்றே தொடங்கிவிட்டது). ரசிகர்கள் பெரும் வரிசையில் நின்று டிக்கெட்டுகள் வாங்கினர்.
ஆனால் ஆன்லைனிலும் ஒரே நேரத்தில் டிக்கெட் விற்றதால் அரை மணி நேரத்துக்குள் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு உள்ள காட்சிகளுக்குத்தான் இப்போது டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
படம் வெளியாகும் வெள்ளியன்று அதிகாலை 1 மணி, 4.30 மணி, 8 மணி, 11.30 மணி, 2.30 மணி, 6.30 மணி மற்றும் இரவு 10 மணி என மொத்தம் ஏழு காட்சிகளை பல அரங்குகள் நடத்துகின்றன.
மாயாஜாலில் உள்ள 16 திரைகளிலும் பத்து நிமிட இடைவெளியில் ஒரு காட்சி என 100 காட்சிகளுக்கும் அதிகமாக லிங்கா திரையிடப்படுகிறது. மாயாஜால், தேவி போன்ற மால்களில் இன்றுதான் ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது என்பதால், முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த அரங்குகளுக்காக காத்திருக்கின்றனர்.