சினிமா இயக்குநரிடம் துப்பாக்கி முனையில் 40 சவரன் நகை, 2 லட்சம் ரொக்கம் கொள்ளை!
சென்னை: வளசரவாக்கத்தில் உள்ள சினிமா இயக்குநர் ஒருவரின் அலுவலகத்தில் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கத்தை கத்தி முனையில் கொள்ளையடித்துள்ளனர்.
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க என்ற படத்தை ஜமுனா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக தயாரித்து, இயக்கி இருப்பவர் தஞ்சை கே.சரவணன்.
அவர் நேற்று முன்தினம் தனது வளசரவாக்கம் அலுவலகத்தில் இருந்தபோது. தன்னிடம் வேலை செய்த பிரபாகர் என்வபர் அடியாட்களுடன் வந்து கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மிரட்டி அவரிடம் இருந்த நாற்பது சவரன் நகை மற்றும் இரண்டு லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள்.
இது தொடர்பாக கே சரவணன் இன்று பிற்பகல் வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.


Click it and Unblock the Notifications











