பத்திரமா வீட்டுக்கு போவேனான்னு தெரியல, பயமா இருக்கு: பிக் பாஸ் போட்டியாளர் கவலை
சென்னை: நான் ஜெயிக்க மாட்டேன். நான் வீட்டிற்கு பத்திரமாக போவேனா என்று தெரியாது. மக்கள் மீது பயமாக உள்ளது என்று பிக் பாஸ் போட்டியாளர் காஜல் தெரிவித்துள்ளார்.
வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார் நடிகை காஜல். அவர் காயத்ரி, ஆரவை வறுத்தெடுப்பார் என்று பார்வையாளர்கள் நினைத்தனர்.
காஜலோ வந்த வேகத்தில் காயத்ரியுடன் கைகோர்த்துவிட்டார்.

கமல்
கன்ஃபெஷன் அறையில் காஜல் கமல் ஹாஸனிடம் பிக் பாஸ் வீட்டில் இருப்பது பற்றி தெரிவித்தார். அப்போது அவர் காயத்ரி மிகவும் அப்பாவி என்று கூறினார்.

காயத்ரி
காயத்ரி என்னை மாதிரி. மனதில் பட்டதை பேசிவிடும் அப்பாவி என்றார் காஜல். நான் ஜெயிக்க மாட்டேன். நான் வீட்டிற்கு பத்திரமாக போவேனா என்று தெரியாது. மக்கள் மீது பயமாக உள்ளது என்று காஜல் தெரிவித்தார்.

ஆரவ்
காயத்ரியை போன்றே ரைசா மற்றும் ஆரவ் ஆகியோரும் உண்மையாக உள்ளனர். மற்றவர்கள் பொய் பேசுகிறார்கள். சூஜாவுக்கு என்னை பிடிக்காது என்று நினைக்கிறேன் என்று காஜல் கமலிடம் கூறினார்.

சினேகன்
வையாபுரிக்கும் என்னை பிடிக்கவில்லை. சினேகனை எனக்கு ஏற்கனவே தெரியும். அவர் பிறரை கட்டிப்பிடித்தது போன்று என்னை கட்டிப்பிடிக்கவில்லை. என் கூட பேசவே இல்லை என்றார் காஜல்.
சாபம்
கடவுளே காஜலுக்கும் ஆரவுக்கும் லவ் செட் ஆகனும் ....டெய்லியும் காஜல் ஆரவ தூக்கிபோட்டு மிதிக்கனும், அப்போதான் ஓவியா அருமை இந்த ஆரவ்கு தெரியும் என்று ஓவியா ஆதரவாளர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











