Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
திருக்குறளை வைத்து உருவாகும் படத்தில் மோகன்பாபுவின் மகன்! - இரு மொழிகளில் தயாராகிறது
சென்னை : பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணு நடிக்கும் முதல் நேரடித் தமிழ் படம் 'குறள் 388'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. தெலுங்கில் 'ஓட்டர்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சுரபி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர சம்பத்ராஜ், போசாளி கிருஷ்ண முரளி, நாசர், பிரகதி, முனீஸ்காந்த், பிரமானந்தம் உள்பட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார்.
ஏழு வார்த்தைகளே கொண்ட திருக்குறளின் மூலம் சொல்லப்படாத கருத்துக்கள் எதுவும் இல்லை. "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்" என்ற 388-வது குறளின் கருத்துக்கள் தான் இந்தப் படத்தின் கதைக் கரு. அதாவது மக்களை முறையாகப் பராமரித்து காக்கின்ற மன்னன். அந்த மக்களுக்கு இறைவனைப் போன்றவன் என்பது அந்த குறளின் கருத்து.
'இன்றைய காலக்கட்டத்துக்குத் தேவையான பரபரப்பான கருத்தை உள்ளடக்கிய படமாக 'குறள் 388' உருவாகிறது. இந்தப் படம் எனது தமிழ் திரையுலகப் பிரவேசத்துக்கு சரியான படமாக இருக்கும்' என மனோஜ் மஞ்சு கூறியிருக்கிறார்.