Don't Miss!
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
'குட்டிப்புயலே...' - ட்விட்டரில் குவியும் வாழ்த்து
சென்னை : கடந்த 20-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற 'மெர்சல்' பாடல் வெளியீட்டு விழாவில் பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் கான்செர்ட்டும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீன் கலந்து கொண்டார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'மெர்சல்' விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டார்.
ரசிகர்கள் வாழ்த்து :
பவ்யமாகப் பார்த்தபடி இருக்கும் அவரது புகைப்படத்திற்கு ரஹ்மான் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 'குட்டிப் புயல்', 'குட்டி இசைப்புயல்' என அமீனுக்குப் பல பட்டங்களையும் சூட்டியுள்ளனர்.
|
ரஹ்மானின் கலர் ஜெராக்ஸ் :
அமீனை ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெராக்ஸ் எனவும் புகழ்ந்துள்ளனர். இங்கே ஒருவர் எப்படி வர்ணித்திருக்கிறார் எனப் பாருங்கள்...
குட்டி இசைப்புயல் :
ஏ ஆர் அமீன் தனது ஆறு வயது முதலே தனது தந்தை ரஹ்மானின் சினிமா பாடல்களில் பாடி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'ஓ காதல் கண்மணி' படத்தில் தனது தந்தையின் இசையில் ஒரு பாடலைப் பாடினார். அவர் பாடிய 'மௌ லா வா சலீம்...' பாடல் பலத்த பாரட்டைப் பெற்றது.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? :
14 வயதாகும் அமீன் இப்போதே வளர்ந்துவரும் பாடகருக்கான மிர்ச்சி இசை விருது, சிறந்த பின்னணிப் பாடகருக்கான விகடன் விருது என இரு பெரிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவரும் தனது அப்பாவைப் போல இரண்டு ஆஸ்கர் விருதுகளை இரண்டு கைகளிலும் ஏந்தியபடி 'எல்லாப் புகழும் இறைவனுக்கே...' எனச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஜெய் ஹோ!