Don't Miss!
- Finance விப்ரோ CEO பதவிக்கு வரும் முன்பே இப்படியொரு வேலையை செய்திருக்கிறார் ஸ்ரீனிவாஸ் பாலியா..!
- Technology புது ரூல்ஸ்.. லோயர் பெர்த்தில் செக்.. வயதானோருக்கு முன்னுரிமை.. மற்ற பயணிகள் முன்பதிவு.. ரயில்வே விளக்கம்!
- News "வருத்தப்படுவீங்க.." தேர்தல் பத்திரங்கள் ரத்து.. வந்து விழுந்த கேள்வி.. பிரதமர் சொன்ன பதில் இதுதான்
- Lifestyle 100 ஆண்டுகள் கழித்து மீனத்தில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
- Sports RCB vs SRH : எல்லை மீறிப் போன ஆர்சிபி வீரர்கள்.. "நல்ல வார்த்தையில்" திட்டிய விராட் கோலி.. கதறிய ரசிகர்கள்
- Automobiles டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
இசையால் டெல்லிவாசிகளை கட்டிப் போட்ட ஏ.ஆர்.ரகுமான்
டெல்லி: தனது அருமையான பாடல்கள் மற்றும் இசையால் டெல்லிவாசிகளின் மனதைத் திருடியிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
என்ஹெச்7 வீக்என்டர் என்பது பல்வேறு நகரங்களில் நடைபெறும் ஒரு இசை நிகழ்ச்சி ஆகும். கடந்த 2010 ம் ஆண்டிலிருந்து இந்த இசை நிகழ்ச்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வருட இசைநிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்.
தில் சே மற்றும் ஓ ஹம்டும் சுனியோ ரே போன்ற போன்ற காதல் பாடல்களின் மூலம் நிரம்பி வழிந்த அந்தக் கூட்டத்தில் பல்வேறு இதயங்களை ரகுமான் தன் வசப்படுத்தி விட்டார்.
சர்வதேச டிஜே மார்க் ரான்சன் மற்றும் அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற மெகதீத்( இசைக்குழுவினர்) ஆகியோர் ரகுமானுக்கு பக்கபலமாக விளங்கி இசை மற்றும் பாடல்களில் அவருக்கு உதவிகள் செய்தனர்.
"இந்த இசை நிகழ்ச்சிக்கு நான் இங்கு என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்தேன். ஏனெனில் இந்தத் தலைமுறையின் இசையார்வம் முற்றிலும் மாறிவிட்டது.
ஆனால் எனது இசையை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நினைத்தேன். கடவுள் ஆசீர்வாதம் செய்வார்" இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டு இருந்தார். அதே போன்று அவர் மேடையில் தோன்றியபோது இளைய தலைமுறையினர் அவருக்கு மிகுந்த வரவேற்பு அளித்தனர்.
தற்போது இவரின் இசையில் வெளியான தமாஷா (பாலிவுட்) படம் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக 2011 ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ராக் ஸ்டார் படத்தில் இம்தியாஸ் அலி மற்றும் ரன்பீருடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.