சிம்பு மாதிரி சான்ஸே இல்லை: புகழ்ந்து தள்ளும் ஏஏஏ குழு
சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்தாவன் படத்திற்காக இரவு, பகல் பார்க்காமல் நடித்தாராம் சிம்பு.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 4 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். படம் இரண்டு பாகங்களாக ரிலீஸாக உள்ளது.

முதல் பாகம் ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழுவினர் சிம்புவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சிம்பு என்றால் வம்பு, அவர் நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வர மாட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் ஆதிக் படத்திற்காக தொடர்ந்து 12 மணிநேரம் ஷூட்டிங்கில் கலந்து கொண்டாராம் சிம்பு.
இரவு, பகல் பார்க்காமல் நடித்தாராம். சிம்புவின் அர்ப்பணிப்பை பார்த்த படக்குழுவால் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications











