வலிநிரம்பிய இதயத்தோடு சிரிக்க வைத்தவர் ஆச்சி!
-கவிதா பாரதி
பத்திரிகையொன்றில் அவரைப்பற்றி கட்டுரை எழுதுவதற்காக ஆச்சியைச் சந்தித்தேன்...
தன் வாழ்க்கையைப்பற்றி பேச ஆரம்பித்தவர் கண்கலங்கி, பின் கதறி அழத்தொடங்கிவிட்டார்.

தீராச்சாபம் என்னைப் பிடித்திருக்கிறது என்று கரைந்து ததும்பிய அவரை ஆறுதல்படுத்த என்னிடம் வார்த்தைகளில்லை.
வெளிச்சம் தரும்
திரியைச் சுற்றி கருப்பு என்பது போல்
வலி நிரம்பிய இதயத்தோடுதான்
அவர் நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அவர் சுமந்த துயரங்களுக்காக வருந்தலாம்.. மரணத்திற்காக வருந்த வேண்டிய அவசியமில்லை.. பாவப்பட்ட அந்த ஆத்மாவிற்கு மரணம்
விடுதலையாகவுமிருக்கலாம்.
நீங்கள் ஏங்கிய
சாந்தியும், சமாதானமும்
இனியேனும் உங்களுக்குக் கிட்டட்டும் தாயே!
Comments


Click it and Unblock the Notifications