பிக் பாஸ் டைட்டிலை ஜெயிச்சதும் ஆரவ் போட்ட முதல் ட்வீட் என்ன தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஆரவ் ட்வீட்டியுள்ளார்.
பிக் பாஸ் டைட்டிலை கணேஷ் வெங்கட்ராம் கைப்பற்றுவார் என்று எதிர்பார்த்தபோது ஆரவுக்கு அது கிடைத்தது. 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஆரவ் அங்கிருந்து வெளியே வந்ததும் ட்வீட்டியுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இது தான் என்று ட்வீட்டியுள்ளார்.
அன்பு
அன்பு, ஆதரவு அளித்ததற்கு அனைவருக்கும் நன்றி.. இந்த டைட்டிலை உங்கள் அனைவருக்கும் சமர்பிக்கிறேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஆரவ்.
ஓவியா ஆர்மி
ஆரவின் ட்வீட்டை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்கள் அவரை கலாய்த்துள்ளனர். டைட்டிலை நீங்க ஜெயிச்சிருக்கலாம் ஆனால் மக்களின் உள்ளங்களை வென்றது எங்கள் தலைவி என்கிறார்கள்.
டெடிகேட்
அது எதுக்கு அசிங்கமா டெடிகேட் எல்லாம் பண்ணிக்கிட்டு, நீங்களே வச்சுகோங்க
உண்மை
உங்களை காயப்படுத்த விரும்பவில்லை ஆனால் இது தான் உண்மை
Comments


Click it and Unblock the Notifications