twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலாவை தெளிய வைத்த ஆரி.. உனக்காவது ஷிவானி இருக்கு.. என்னையெல்லாம் யோசிச்சுப் பார்!

    |

    சென்னை: பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களாக சண்டை போட்டு வந்த பாலாஜியும் ஆரியும் ஒரு வழியாய் பேசி சமாதானமாகிவிட்டனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி, ஆரியை ஒரு எதிரியை போல் பார்த்து வந்தார். ஆரியிடம் நேர்மை இல்லை என கிடைத்த இடத்தில் எல்லாம் குத்திக் கொண்டு இருந்தார்.

    கடந்த சனிக்கிழமை எபிசோடில் பாலாஜிக்கு கமல் குறும்படம் போட்டு வெளுத்துவிட்ட பிறகுதான் கொஞ்சம் அடங்கினார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இருவரும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசினர்.
    இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இருவரும் அமர்ந்து கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசினர்.

    அர்ச்சனா போனால்

    அர்ச்சனா போனால்

    அப்போது நாமினேஷன் புராசஸ் குறித்து பேசிய பாலாஜி, இந்த வாரம் நாமினேஷனுக்கு 4 பேர் லவ் பெட்லேருந்து வந்திருக்காங்க. அதுவே சந்தோஷம்தான் என்றார். தொடர்ந்து பேசிய ஆரி, அர்ச்சனா நாமினேஷனுக்கு போனால், கேம் இன்னும் நல்லாருக்கும். நம்மலால உடைக்க முடியும்.

    தனியாதான் இருக்கணும்

    தனியாதான் இருக்கணும்

    அவங்க இருக்குறதால ஒரு ஹோல்டு இருந்துக்கிட்டே இருக்கு. அவங்க அன்பு ஸ்ட்ரேட்டர்ஜியால திரும்ப திரும்ப இவங்கதான் வந்து விழறாங்க. இவங்க ஒரு பில்லரா இருந்து, மத்தவங்களை ஷீல்டு மாதிரி ஆக்கிட்டாங்க. எனக்கெல்லாம் ஸ்ட்ரெஸ் வந்தா நான்லாம் தனியாதான் இருக்கணும்

    பேச இங்கே ஆளு இருக்காது

    பேச இங்கே ஆளு இருக்காது

    டெய்லி இரவு 9 மணி ஆச்சுன்னா எல்லோரையும் கூப்பிட்டு கை கால் அமுக்கி விடுறது. சந்தோஷமாதான் செய்றாங்க. இதை நான் குறை சொல்லல. ஆனால் அந்தளவுக்கு எமோஷனல் கனெக்ட் ஆகுறாங்கள்ல என்றார். தொடர்ந்து பேசும் பாலாஜி, ஒரு பாயிண்டுக்கு மேல பேச இங்கே ஆளு இருக்காது. அப்போ தனியா உட்காந்து இருப்போம் என்கிறார்.

    என்னை யோசிச்சு பாரு

    என்னை யோசிச்சு பாரு

    அதற்கு பதில் சொல்லும் ஆரி, உனக்காவது ஷிவானி இருக்குடா.. நான்லாம் யார்கூட பேசுறது சொல்லு.. என்று பாலாஜியை கேட்க, அவளும் போயிடுவா. அவளையும் பேக் பண்ணி அனுப்பிச்சுடுவாங்க.. என்றார். தொடர்ந்து பேசும் ஆரி உனக்கு புலம்புறதுக்காவது ஆள் இருக்கு என்னெல்லாம் யோசிச்சு பார் என்றார்.

    நாமதான் பேக்கேஜ் வச்சுக்கிட்டு..

    நாமதான் பேக்கேஜ் வச்சுக்கிட்டு..

    3 வாரத்துக்கு அப்புறம் அவங்க 4 பேர் அப்படியே இருப்பாங்க
    நாம பேக்கேஜ் வச்சுட்டு இருப்போம். உனக்கு ஷிவானி மேல அன்பு இருக்கு கரெக்ட்.. அதை கேம்க்குள்ள கொண்டுவராத. சீரியஸா விளையாடு கேம் ஸ்பிரிட்டோட விளையாடு என்றார்

    கட்டியணைத்த பாலா

    கட்டியணைத்த பாலா

    அதனைக் கேட்ட பாலாஜி, ஆரியை கட்டியணைக்கும் பாலாஜி, குட்லக் ஐ அம் சாரி எல்லாத்துக்குமே..என்றார். அதற்கு தகுதியாயிட்டு டைட்டில தூக்கிட்டு போ, தோத்தாலும் சந்தோஷம் ஜெயிச்சாலும் நல்ல ப்ளேயரோட விளையாடினோம் என்ற சந்தோஷம் இருக்கும என்றார் ஆரி.

    English summary
    Aari and Balaji became friends. Aari says Archana holding her team.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X