Don't Miss!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
25வது நாளைத் தாண்டிய ஆயிரத்தில் ஒருவன்!
சென்னை: எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் மறுவெளியீட்டில் 25 நாட்களை வெற்றிகரமாகக் கடந்துவிட்டது.
ஆயிரத்தில் ஒருவன் படம் 49 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழா எழும்பூர் ஆல்பட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
திரையில் எம்.ஜி.ஆரும், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் தோன்றும்போது சூடம் காண்பித்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். படம் பார்க்க வந்த அனைவருக்கும் ரசிகர்கள் கேசரி வழங்கினார்கள். எம்.ஜி.ஆரின் கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்தனர். கற்பூர ஆரத்தி காட்டினர்.
சென்னை கிண்டி ராஜ்பவன் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் டி.ஈஸ்வரன் வந்திருந்த அனைவருக்கும் லட்டு வழங்கினார். திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம், தியேட்டர் மேனேஜர் மாரியப்பன் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, இறைவன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் மன்றத்தினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதுவரை தியேட்டர்கள் மூலம் மட்டும் ஆயிரத்தில் ஒருவன் படம் ரூ.40 லட்சம் வசூல் ஈட்டியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு மேலும் சில அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடப் போகிறாராம் சொக்கலிங்கம். குறிப்பாக சரியாகப் போகாத பகுதியான மதுரையில் அடுத்த மாதம் மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்.