டோலிவுட்டுக்கு தெரிந்த கலாமின் அருமை கோலிவுட்டுக்கு ஏன் தெரியவில்லை?
சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் படமாக்க உள்ளனர்.
ராமேஸ்வரத்தில் பிறந்து உலக அளவில் பிரபலமான மிஸைல் மேனான மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார்கள். ஆனால் அவரின் தாய் மொழியான தமிழில் இல்லை தெலுங்கில்.

தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தனது நண்பர் அனில் சுன்காராவுடன் சேர்ந்து கலாமின் வாழ்க்கையை தெலுங்கில் படமாக்க உள்ளார். இது தொடர்பாக அவர் கலாம் குடும்பத்தாரை சந்தித்து முறைப்படி அனுமதி பெற்றுள்ளார்.
இது நல்ல விஷயம் தான். ஆனால் உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த தமிழனின் வாழ்க்கையை கோலிவுட்காரர்கள் அல்லவா முந்திக் கொண்டு படமாக்கி இருக்க வேண்டும்.
முன்னதாக குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை உருவாக்கிய கோவையை சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலத்தின் வாழ்க்கை வரலாறை பேட்மேன் என்ற பெயரில் பாலிவுட்டில் படமாக எடுத்தார்கள். அக்ஷய் குமார் நடித்த அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
முருகானந்தம் அருணாச்சலத்தை மட்டும் அல்ல அப்துல் கலாமையும் கண்டு கொள்ளவே மாட்டோம் என்ற ஒரு முடிவில் உள்ளது கோலிவுட்.


Click it and Unblock the Notifications











