Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரம்பா வழியில் அபிநயாஸ்ரீ !
சேலத்தில் கலைவிழாவுக்கு அழைத்து விட்டு கூறிய பணத்தைத் தராத நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது கவர்ச்சிநடிகை அபிநயாஸ்ரீ, நடிகர்கள் ராம்ஜி, சிட்டிபாபு ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
சமீபத்தில் கோவையில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்ற நடிகை ரம்பா, தன்னை ஆடச் சொல்லிவற்புறுத்தியதாகவும், கூறிய தொகையை கொடுக்க மறுத்ததாகவும் கூறி இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்உள்ளிட்டவர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந் நிலையில், ரம்பாவைத் தொடர்ந்து அபிநயாஸ்ரீயும் போலீஸுக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.சேலத்தில் நடந்த கிறிஸ்துமஸ் தின கலை விழாவில் கலந்துகொள்ள அபிநயாஸ்ரீ, நடிகர்கள் ராம்ஜி, சிட்டிபாபு,குமரிமுத்து உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
சேலம் நேரு கலையரங்கில் கலை நிகழ்ச்சி திட்டமிட்டபடி தொடங்கியது. அபிநயாஸ்ரீ, ராம்ஜி, சிட்டிபாபுஆகியோரைத் தவிர மற்றவர்கள் மேடைக்கு வந்து ஒவ்வொரு நிகழ்ச்சியாக செய்து கொண்டிருந்தனர். ஆனால்அபிநயாஸ்ரீயைக் காணாததால் அவரைத் தரிசிக்க காத்துக் கொண்டிருந்த கூட்டம் கொந்தளிக்க ஆரம்பித்தது.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் குழம்பிப் போய் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தனர். ஏன் மேடைக்குவரவில்லை என்று கேட்டபோது, பேசியபடி முதலில் பணத்தைக் கொடுங்கள் பிறகு வருகிறோம் என்று மூன்றுபேரும் கூறி விட்டனர்.
முதலில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள், முடிந்தவுடன் பணத்தைத் தருகிறோம் என்று அமைப்பாளர்கள்கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை 3 பேரும் ஒத்துக் கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து 3 பேரும் போலீஸிலும் புகார் செய்தனர். ஒப்புக் கொண்டபடி பணத்தைக் கொடுக்கவில்லைஎன்று அவர்கள் தங்களது புகாரில் கூறியிருந்தனர்.
3 பேரும் ரூ. 1.20 லட்சம் பணம் கேட்டிருந்ததாகவும், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முதல் கட்டமாக ரூ 35,000கொடுத்திருந்ததாகவும், நிகழ்ச்சி முடிந்தபின் மீதப் பணத்தைக் கொடுப்பதாகவும் கூறியிருந்ததாகத் தெரிகிறது.ஆனால் முதலிலேயே முழுப் பணத்தையும் கொடுத்தால்தான் ஆடுவோம் என்று 3 பேரும் கறாராக கூறி விட்டதால்பிரச்சினை உருவானது.
கிறிஸ்துமஸ் போன்ற நல்ல நாட்களுக்கு, கவர்ச்சி நடிகையைக் கூப்பிட்டுத்தான் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டுமா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
இஷ்டத்துக்கு பேசிய பேரரசு.. மேடையிலேயே தரமான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. செம சம்பவம்