Don't Miss!
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்கள் உங்களை நரக வாசலுக்கு அழைத்து செல்வார்களாம்..இவங்ககிட்ட விலகியே இருங்க!
- News ராகுல் முதல் டிகே சிவக்குமார் தம்பி வரை.. 2ம் கட்ட தேர்தலில் விஐபி வேட்பாளர்கள் இவர்கள் தான்!
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆராத்யாவால் ஐஸ்வர்யா ராய்க்கும், கணவருக்கும் இடையே சண்டையா?
மும்பை: குழந்தை ஆராத்யாவின் எதிர்காலம் குறித்து பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே தகராறு என்று இந்தி செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். தந்தை அபிஷேக் பச்சனும் அப்படி தான்.
இந்நிலையில் ஆராத்யாவின் எதிர்காலம் குறித்து கணவன், மனைவி இடையே பிரச்சனை என செய்தி வெளியாகியுள்ளது.
நடிப்பு
ஆராத்யாவை குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகம் செய்ய தந்தை அபிஷேக் பச்சன் விரும்புவதாகவும், அதற்கு ஐஸ்வர்யா எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சனை என்று இந்தி செய்தி இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
அபிஷேக்
ஆராத்யா எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என நான் முடிவு செய்ய மாட்டேன். என் மகளுக்கு எது விருப்பமோ அதையே அவர் செய்யட்டும் என்று அபிஷேக் முன்பு தெரிவித்திருந்தார்.
ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ஆராத்யாவை படப்பிடிப்புதளத்திற்கு தன்னுடன் அழைத்துச் சென்றாலும் ஆராத்யாவை கேரவனில் தான் அமர வைப்பார். தனது மகளை அவர் நடிகையாக்கிப் பார்க்க விரும்புவதாக இதுவரை தெரிவிக்கவில்லை.
அமிதாப்
தனது பேத்தி ஆராத்யாவின் செல்லக் குறும்புகள் குறித்து தாத்தா அமிதாப் பச்சன் அவ்வப்போது சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார். ஆராத்யா பார்க்க அமைதியாக இருந்தாலும் பேச்சில் கெட்டிக்காரியாம்.