Don't Miss!
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நீங்க சொல்றது தப்பு...அண்ணாச்சியை குறிவைக்கும் அபினய் குரூப்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 போட்டியின் எட்டாம் நாளான இன்று வீட்டின் தலைவரை தேர்வு செய்வதற்கான டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் முதுகில் பெரிய பலூனை கட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை மணி ஒலிக்கும் போதும் ஓடிச் சென்று, டேபிளில் இருக்கும் மரக்கோலை எடுத்து மற்றவரின் பலூனை உடைக்க வேண்டும்.
கடைசி வரை தங்களின் பலூனை உடைபடாமல் காப்பாற்றுபவர் வீட்டின் இந்த வார தலைவராக தேர்வு செய்யப்படலாம் என டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் ஆரம்பத்திலேயே பெரும்பாலானவர்களின் பலூன்கள் உடைக்கப்பட்டன. நிரூப், தாமரை, சின்ன பொண்ணு, மதுமிதா, பிரியங்கா ஆகியோர் அதிக நேரம் தங்களின் பலூனை காப்பாற்றி வைத்தனர்.
யாருடைய பலூன் உடைகிறதோ அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறுவார்கள் என பிக்பாஸ் கூறி இருந்தார். ஆனால் அபினய், வருண், சிபி உள்ளிட்டோரின் பலூன்கள் உடைந்த பிறகும் அவர்கள் மற்றவர்களின் பலூனை உடைக்க முயற்சித்தனர். இது தவறு என இமான் அண்ணாச்சி எடுத்துக் கூற முயன்றார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை.
ஒருவர் தலைவர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை என்றால் நான் அவரின் பலூனை உடைப்பதில் என்ன தவறு என அபினய் மற்றும் வருண் மிக கோபமாக அண்ணாச்சியிடம் வாக்குவாதம் செய்தனர். அண்ணாச்சியை அவர்கள் பேச விடாமல், நீங்க சொல்றது தப்பு என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
அப்போது ஓடிச் சென்று பிளாஸ்மா டிவி முன்பு இருந்த போட்டி விதிகளை படித்த ஐக்கி, பலூன் உடைபட்டவர் போட்டியில் இருந்து வெளியேறுவார் என படித்தார். அதற்கு பிறகு அண்ணாச்சியும், இந்த வார்த்தை நினைவில் இருந்ததால் தான் நான் கூறினேன் என்றார். அதுவரை கோபமாக வாக்குவாதம் செய்த வருண் போன்றவர்கள், இல்லை நான் கூலாக தான் பேசுகிறேன் என்றனர்.
சிறுத்தை சிவா படத்தில் இணையும் சூர்யா... இன்றைய டாப் 5 பீட்ஸில்!
அபினய், வருண், சிபி ஆகியோர் தங்களுக்குள் ஒரு குரூப் உருவாக்கிக் கொண்டுள்ளனர். இந்த குரூப், அண்ணாச்சியை குறிவைத்து தாக்குவதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.