Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சினிமா ஸ்ட்ரைக்... குறுக்குசால் ஓட்டும் அபிராமி ராமநாதன்!
Recommended Video
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மார்ச் 16, அதாவது நாளை முதல் படங்களைத் திரையிடாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
ஆனால், சென்னை மா நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனோ இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் சென்னையில் ரோகிணி ஆர் பன்னீர் செல்வம் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. அதில் 8% கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும், பெரிய திரையரங்குகளில் சீட் குறைக்க அனுமதி தர வேண்டும், தியேட்டர் லைசென்ஸ் மூன்று வருடத்துக்கு ஒருமுறை மட்டும் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும், திரையரங்கு பராமரிப்புக் கட்டணமாக A/C திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாயும், Non A/C திரையரங்குகளில் 3 ரூபாயும் பிடித்தம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளுக்கு அரசு ஆணை வழங்க ஏற்கெனவே 2017 மே மாதம் நடந்த பேச்சுவார்த்தையின் போது தமிழக அரசு ஒப்புக் கொண்ட அடிப்படையில் ஒரு வார காலத்திற்குள் அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இல்லையேல் மார்ச் 16ஆம் தேதி முதல் எந்தப் படங்களையும் திரையிடாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இதனால் நாளை (மார்ச் 16) முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்படுகிறது
இந்த நிலையில் சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று (மார்ச் 14) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 147 திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் என்கிறார்கள்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எடுத்த முடிவின்படி மார்ச் 16 முதல் திரையரங்குகளை மூட மாட்டோம். ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள மாட்டோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் என எந்த மொழி படமாக இருந்தாலும் பொது மக்களின் பொழுது போக்குக்காகத் திரையிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்று சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் பெயரில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டம் யார் தலைமையில் எங்கு நடந்தது என்பது போன்ற எந்த விவரங்களும் இன்றி பத்திரிகை தொடர்பாளர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் அபிராமி ராமநாதனின் இந்த அறிவிப்பு வேலைநிறுத்தம் நடைபெறுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது மாநில அமைப்புடன் எப்போதும் இணைந்து செயல்படுவதைத் தவிர்த்து வரும் அபிராமி ராமனாதன் இப்போதும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதையும் தவிர்த்து உள்ளார்.
இப்போதைய சினிமா ஸ்ட்ரைக் பிரச்சினைக்குக் காரணமான டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து ஆர்ப்பாட்டமாக வரவேற்றவர்களில் அபிராமி ராமநாதனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.