Don't Miss!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஃபைனல் வரைக்கும் என்னை நீ கூட்டிட்டுப் போவியா? பிரியங்காவிடம் ஒப்பனாவே கெஞ்சிய அபிஷேக்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல் வரைக்கும் தன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என அபிஷேக் ராஜா கேட்டது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் உள்ளே நுழைந்தும் அதே வேலையை தான் செய்து வருகிறார்.
பிரியங்காவின் நிழலிலேயே நிகழ்ச்சியில் தங்கி விடலாம் என்கிற தன்னுடைய பிளானையும் வெளிப்படையாக பேசுவதை அப்பட்டமாக காட்டி அவரை மட்டும் அசிங்கப்படுத்தி உள்ளனர்.
எலிமினேட் ஆன ஆண் போட்டியாளர்
பிக் பாஸ் தமிழ் 5 சீசனில் இதுவரை ஒரே ஒரு ஆண் போட்டியாளர் தான் எலிமினேட் ஆகி உள்ளார். அவர் நம்ம சினிமா பையன் அபிஷேக் ராஜா தான். மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த அபிஷேக் ராஜா இந்த வாரமும் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் உள்ளதாக அன் அஃபிஷியல் போலிங் சொல்கிறது.
பிரியங்காவின் நிழலிலேயே
பிரியங்கா பக்கத்திலேயே இருந்தால் தான் கேமராவில் என்னை காட்டுவார்கள் அவர் தான் விஜய் டிவியின் செல்லப் பிள்ளை என ஆரம்பத்திலேயே வெளிப்படையாக பேசி இரண்டாவது வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிஷேக் மீண்டும் பிரியங்காவின் நிழலிலேயே விளையாடி வருகிறார்.
ராஜு செய்வது போல
ராஜு ஜெயமோகன் எப்படி இமான் அண்ணாச்சியை கடைசி வரைக்கும் தன்னுடன் அழைத்துச் செல்வேன் என சொல்லி விளையாடி வருகிறான் அதே போல நீயும் நானும் கடைசி வரைக்கும் ஒன்றாக விளையாடினால் என்ன என பிரியங்காவிடம் அபிஷேக் ராஜா பகிரங்கமாக பேரம் பேசும் காட்சியை லேசாக காட்டி அபிஷேக்கின் முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்டுள்ளார் பிக் பாஸ் எடிட்டர்.
பிரியங்கா சேஃப்
அபிஷேக் ராஜா அப்படி கேட்டதும் பிரியங்கா அதற்கு என்ன சொன்னாங்க என்பதை மெயின் எபிசோடில் காட்டாமல் மறைத்து விட்டது பிக் பாஸ் குழு என்கிற குற்றச்சாட்டை பிக் பாஸ் ரசிகர்கள் வைத்து வருகின்றனர். தனியாக விளையாடி ஜெயிப்பது தானே பிக் பாஸ் கேம் இப்படி பகிரங்கமாக பிரியங்காவின் தயவால் கடைசி வரைக்கும் அபிஷேக் வர நினைப்பது ரொம்ப சீப்பாக இல்லையா? என்கிற கேள்வியும் பிரியங்காவே இதை அபிஷேக்கிடம் சொல்லி இருந்தால் அது வேறு விஷயம் ஆனால், அபிஷேக் கேட்டது ரொம்பவே தப்பு என்றும் கூறி வருகின்றனர்.
வெளியேறுவாரா அபிஷேக்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இரண்டாவது ஆண் போட்டியாளராக இந்த வாரம் அபிஷேக் ராஜாவே வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. நிரூப்பை கழட்டி விட்டு பிரியங்கா உடன் கடைசி வரைக்கும் இந்த பிக் பாஸ் வீட்டில் டிராவல் பண்ண வேண்டும் என்கிற அபிஷேக்கின் கனவை முறியடித்து மீண்டும் அவரை இந்த வாரமே வெளியேற்றுவார்களா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.