twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாவனி கிட்ட பேசினாலே பிக் பாஸ் விட்டு வெளியே போக வேண்டியது தான்.. சொந்த கதையை சொல்றாரோ அபிஷேக்!

    |

    சென்னை: அக்‌ஷராவின் டபுள் ஆம்லேட் கதையை சொல்லி முடித்த அபிஷேக் அப்படியே கட கடவென பாவனியிடம் பேசினாலே அவங்களுக்கு பாயசம் போடப்படும் விஷயத்தையும் சொல்லி விட்டு அடுத்த டாப்பிக்கிற்கு சென்று விட்டார்.

    பாவனியிடம் திரும்ப வந்து கன்னத்தை எல்லாம் தடவி பேசிய அபிஷேக் ராஜா திடீரென அவர் பக்கம் இல்லாமல் பிரியங்காவின் நிழலிலேயே அதிகம் கேம் விளையாட காரணமும் அந்த பயம் தானா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

    தாமரையை சீண்டியது போல அக்‌ஷராவையும், பாவனியையும் அபிஷேக் ஏன் சீண்டவில்லை என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு அதிகமாகவே உள்ளது.

    இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாத குழந்தை உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்

    லோன்லி பாவனி

    லோன்லி பாவனி

    ஒன்லி பாவனி.. லோன்லி பாவனி.. பாவனியிடம் பேசினாலே வெளியே போவ நீ என கடகடவென பாவனி பற்றி அபிஷேக் ராஜா தனக்குள் இருக்கும் மனக் குறையை குமுறியதாகவே அந்த செய்தி பார்க்கப்படுகிறது என பாவனி ரசிகர்கள் பாய்ந்து வருகின்றனர்.

    உஷாரா இருந்துக்கோ

    உஷாரா இருந்துக்கோ

    பாவனி பற்றி இப்படி அவதூறு பரப்பும் அபிஷேக்கிற்காக அவர் எலிமினேட் ஆகும் போது காயின் யூஸ் பண்ணி காப்பாத்த துடித்த பாவனி அபிஷேக்கிடம் ரொம்பவே உஷாரா இருந்துக்கோங்க என பாவனி ரசிகர்கள் பெரிய எச்சரிக்கை போர்டை சமூக வலைதளங்களில் மாட்டி வருகின்றனர்.

    அபிஷேக்கிற்கு பயம்

    அபிஷேக்கிற்கு பயம்

    ஏற்கனவே இரண்டாவது வாரத்தில் பாவனி உடன் நெருங்கி பழகிய நிலையில் தான் நாம் இந்த வீட்டில் இருந்து வெளியேறினோம். பாவனியின் தோழிகளான சுருதி, மதுமிதா, இசை, ஐக்கி என ஒவ்வொருவராக வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். மீண்டும் அவருடன் இணைந்தால் நம்ம நிலைமையும் மோசமாகி விடும் என பயந்து தான் இப்போதெல்லாம் பாவனி பக்கமே போவது இல்லையோ அபிஷேக் என கலாய்த்து வருகின்றனர்.

    அபிநய் எஸ்கேப்

    அபிநய் எஸ்கேப்

    பாவனி மீது அன்பு வைப்பவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆகவில்லை. பாவனி யார் மீது அன்பு வைக்கிறாரோ அவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆகிறார். அதனால் தான் இன்னமும் அபிநய் எவிக்‌ஷனில் இருந்து எஸ்கேப் ஆகிக் கொண்டே வருகிறார் என வித விதமான கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

    Recommended Video

    Pavani கிட்ட Thamarai ஒரு மணி நேரம் என்ன பேசினார் | Bigg Boss 5 Tamil Day 58 Mini's View
    பாவம் பாவனி

    பாவம் பாவனி

    இப்படி மெட்ராஸ் பட சுவர் போலவே பாவனியை ரெஜிஸ்டர் செய்து விட்டாரே அபிஷேக் ராஜா என பாவனி ஆர்மியினர் கொதித்தெழுந்துள்ளனர். எத்தனை கஷ்டப்பட்டாலும், எத்தனை இன்னல்கள் வந்தாலும், கடைசி வரை இந்த ஷோவில் நிலைத்து இருக்கப் போகும் பெண் போட்டியாளர் நாம தான் என்பதை நன்கு அறிந்து கொண்ட பாவனி மனம் தளராமல் போராடி வருகிறார் என்றும் அவரது ரசிகர்கள் பாவனிக்கு ஆதரவாக உள்ளனர்.

    English summary
    Abishek Raja reveals why no one dare to speak Pavani because if anyone try to talk with her they will evict immediately in Red Tv news task.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X