500, 1000 நோட்டு தடை... குவிந்த பாராட்டுகள்... மொபைலை ஆஃப் பண்ணிய இயக்குநர் சசி!
கள்ள நோட்டு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நேற்று இரவு ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்தது. இதில் பிரதமர் மோடிக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. சிற்சில விமர்சனங்களும் வரத்தான் செய்கின்றன.

இன்னொரு பக்கம் இந்த முயற்சிக்கு நேற்று இயக்குநர் சசிக்கு கால் பண்ணி ஏராளமானோர் பாராட்டியிருக்கிறார்கள். காரணம் இந்த யோசனையை சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்தில் வசனமாக வைத்திருந்தார் சசி. எனவே சசிக்கு நெருக்கமானவர்கள் சசிக்கு கால் பண்ணி பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மொபைலை சுவிட்ச் ஆஃபே செய்து விட்டார் சசி. படத்தின் கதை விவாதத்தின் போது இந்த டயலாக்கை சேர்க்கச் சொன்னது துணை இயக்குநர் ஒருவராம்.

ஆனால் இதற்கு முன்பே ரஜினி நடித்த சிவாஜி படத்தின் க்ளைமாக்ஸில் இன்றைய தினத்தந்தியின் தலைப்புச்செய்தி அப்படியே காண்பிக்கப்படும். அந்த காட்சியும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











