Don't Miss!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கார் மோதி விபத்து.. சிகிச்சை பலனின்றி 28 வயது இளைஞர் பரிதாப மரணம்.. சிக்கலில் சினேகன்
சென்னை: கவிஞர் சினேகன் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கவனக் குறைவாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சினேகன் மீது திருமயம் போலீசார் முன்னதாக வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், தற்போது புதிய வழக்குகள் பாய்ந்துள்ளன.
கவிஞர், நடிகர், பிக் பாஸ் பிரபலம், மநீம இளைஞரணி செயலாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் சினேகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவங்களும் டேஞ்சர் ஸோன்ல தான் இருக்காங்களாம்.. டம்மி மம்மிக்கு டாட்டா காட்டும் நேரம் வந்துடுச்சா?
பைக் மீது மோதிய கார்
கடந்த 16ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சாவேரியார்புரத்தில் தாறுமாறாக கார் ஓட்டி வந்த சினேகன் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அருண் பாண்டி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
28 வயசுதான்
திருமயம் வட்டம் ஊனையூர் அருகே உள்ள ஆலமரத்துக் குடியிருப்பைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அருண் பாண்டி ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது சினேகன் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. அவருக்கு வயது 28.
சிகிச்சை பலனளிக்கவில்லை
திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் பாண்டி, அதன் பின்னர், தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தால், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அருண் பாண்டி பரிதாபமாக உயிரிழந்த தகவல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கலில் சினேகன்
கவனக்குறைவால் வாகனத்தை இயக்கிய கவிஞர் சினேகன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தற்போது 28 வயது இளைஞர் பரிதாபமாக பலியாகி உள்ளார். ஏற்கனவே சினேகன் மீது திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிந்த நிலையில், தற்போது, கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்துதல் மற்றும் விபத்து ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சினேகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
-
2வது திருமணம் செய்துக் கொண்ட அதிதி ராவ்.. சித்தார்த்துடன் தெலங்கானா கோயிலில் ரகசிய கல்யாணம்?
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?
-
அண்டங்காக்கா கொண்டக்காரி மாதிரியே இருக்கே.. ராம்சரணுக்கு பட்டை நாமம் போட்டு விடுவாரோ ஷங்கர்?