"வா நண்பா வா கனவு காணலாம்" அப்துல்கலாமிற்கு பாடல் பாடி இணையத்தில் வெளியிட்ட நடிகர்
சென்னை: மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமலஹாசன், இயக்குநர் டி.ராஜேந்தர் ஆகியோர் கவிதை வடிவில் இரங்கற்பா எழுதி வெளியிட்டனர்.
தற்போது அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் நடிகர் அசோக். தமிழ் சினிமாவில்வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அசோக் அப்துல்கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகளை எடுத்துக் கொண்டு, வா நண்பா வா கனவு காணலாம் என்ற பாடலை எழுதி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
பாடலின் ஆரம்ப வரிகள் தொடங்கி இறுதி வரை உற்சாகத்தை அள்ளித் தெளிக்கும் வரிகளுடன் பாடி அசத்தி இருக்கிறார் அசோக், யூ.கே.முரளியின் இசைக்கு வரிகள் எழுதி இருக்கிறார் கவிஞர் ஜோதிபாசு.
3 மணிநேரத்தில் பாடலை எழுதி பாடி இசை அமைத்து இருக்கின்றனர், ஆரம்பம் தொடங்கி இறுதிவரை கலாம் கலாம் என முடியும் இந்தப் பாடலை அப்துல்கலாமிற்கு அர்ப்பணித்து இருக்கின்றார் நடிகர் அசோக்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அசோக்...


Click it and Unblock the Notifications











