Don't Miss!
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகர் சங்கத்தின் குருதட்சணை திட்டம் சிவக்குமார், சச்சு தொடங்கி வைத்தனர்
சென்னை: நடிகர் சங்கத்தின் குருதட்சணை திட்டத்தை நடிகர் சிவக்குமார், நடிகை சச்சு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
தமிழகமெங்கும் மூத்த தலைமுறை முதல் இளைய தலைமுறை அங்கத்தினர் வரையிலான கலைஞர்களின் முழு விபரங்கள் சேகரிக்கும் மற்றும் பதிவு செய்யும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
மூத்த மற்றும் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குருதட்சணை திட்டம் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களின் கலைத்திறன், முகவரி, குடும்பம் பற்றிய முழு விபரங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவப்பட்டால் அதைப் பற்றிய விபரங்கள் காப்பீடு என அனைத்து விபரங்களையும் நேரடியாக சேகரித்து பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றையும் நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று தொடங்கி வைத்திருக்கின்றனர்.
தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்தத் திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி இருக்கும் நடிகர் சங்கம் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அங்கிருக்கும் நாடக சங்கங்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
அனைத்துக் கலைஞர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் அவற்றை இணையதளத்தில் பதிவு செய்து அதன் மூலம் தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கிட நடிகர் சங்கம் முடிவெடுத்து உள்ளது.