16 ஆண்டுகளுக்குப்பிறகு சந்தித்த ‘காதல்’ ஜோடி... வைரலாகும் பிக்ஸ் !
சென்னை : தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல கமர்சியல் திரைப்படங்கள் வெளியாகி வந்தாலும் அவ்வப்போது எதார்த்தமான திரை களத்தில் உருவாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெறுகின்றன.
அந்தவகையில் 2004ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படம், சில உண்மை சம்பவங்களை தோலுரித்துக் காட்டியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்த நிலையில் காதல் திரைப்படத்தில் நடித்திருந்த பரத் மற்றும் சந்தியா இப்பொழுது 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. காதல் திரைப்படங்களாக

மறக்க முடியாத திரைப்படமாக
காலத்தால் அழியாத காதல் திரைப்படங்களாக தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான திரைக்கதைகளை கொண்டு பல படங்கள் வெளியாகி இருந்தாலும் ரசிகர்களால் இன்று வரை மறக்க முடியாத திரைப்படமாக 2004ஆம் ஆண்டு வெளியான "காதல்" இருந்து வருகிறது.

காதல் திரைப்படம்
சமூக அக்கறையுள்ள திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி பாராட்டுகளைப் பெற்று வரும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் எதார்த்தமான கதைக்களத்தைக் கொண்டு உருவான காதல் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்தது.

மிகப்பெரிய தாக்கம்
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை சந்தியா முதல் முறையாக கதாநாயகியாக காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுக படுத்தப்பட்டதை அடுத்து இவருக்கு ஜோடியாக நடிகர் பரத் நடித்திருந்தார். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்று பல நாட்கள் ஓடியதுடன் இந்த ஜோடி மிகப் பிரபலமாக பேசப்பட்டு, திரைப்படமும் வெற்றி பெற இதன் கிளைமாக்ஸ் காட்சி பார்த்த அனைவரிடத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது.

அழகான செல்பி
காதல் திரைப்படத்திற்கு பிறகு பரத் மற்றும் சந்தியா வேறு எந்த ஒரு திரைப்படங்களிலும் இணைந்து நடிக்காத நிலையில், கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த காதல் ஜோடி மீண்டும் சந்தித்து எடுத்துக் கொண்ட அழகான செல்பி ஒன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வர, ரசிகர்கள் இவர்களை மீண்டும் காதல் இரண்டாம் பாகத்தில் பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











