இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு... நடிகர் ஜெய் ட்வீட்!
சென்னை : நடிகர் ஜெய் நேற்று குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. கைது செய்யப்பட்ட ஜெய் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், விஜய் நடிப்பில் நேற்று 'மெர்சல்' டீசர் வெளிவந்தது. இந்த டீசர் ரசிகர்களிடம் பயங்கர வரவேற்பு பெற்றது.
கார் விபத்து தொடர்பாக நடிகர் ஜெய்யிடம் ட்விட்டரில் ரசிகர்கள் விசாரித்து வருகின்றனர். அதற்கு ஒரே ட்வீட் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் ஜெய்.
'மெர்சல்' ஜெய் :
'மெர்சல்' டீசரில் விஜய் 'Peace bro' என ஒரு டயலாக் சொல்வார். அந்த டயலாக் செம்ம ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஜெய்யிடம் விபத்து ஏற்படுத்தியது குறித்து எல்லோரும் கருத்து கேட்க ஜெய் சிம்பிளாக 'Peace Bro' என்று ட்வீட் மூலம் பதில் அளித்துள்ளார்.
ரிலீஸ் ஆகிட்டீங்களா :
அரெஸ்ட் ஆகி ரிலீஸ் ஆனதைத்தான் இப்படி சிம்பாளிக்கா சொல்றாராம் ஜெய்.
ஃபீனிக்ஸ் பறவையாம் :
'ட்ரங்க் அண்ட் ட்ரைவ் பண்ணி ஆக்சிடென்ட் ஆனாலும், கேஸ் போட்டாலும் ஃபீனிக்ஸ் பறவையா எழுந்து வருவீங்க ப்ரோ' என ஒருவர் உசுப்பேற்றியுள்ளார்.
ரைமிங்கு :
'பீஸ் ப்ரோ...' என ஜெய் போட்ட ட்வீட்டுக்கு 'உங்கமேல போட்ட கேஸ் ப்ரோ...' என ரைமிங் & டைமிங் ரிப்ளை கொடுத்திருக்கிறார் ஒருவர்.
இது வேறயா :
சினம் கொண்ட சிங்கத்த சிறையில அடைச்சா, அது சிறையையே சிதைச்சிரும்... பரவால்லியா?


Click it and Unblock the Notifications











