Don't Miss!
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- News
ரயில்வேக்கு மொத்தமாக அள்ளிக் கொடுத்த நிர்மலா.. 2013-14 பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிக ஒதுக்கீடு
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
Budget 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
“பட்டாம்பூச்சி“ படத்திற்காக சைக்கோ கொலைக்காரனாக மாறிய ஜெய்!
சென்னை : பட்டாம்பூச்சி படத்தில் சைக்கோ கொலைகார வில்லனாக நடிகர் ஜெய் நடித்துள்ளார்.
இயக்குநர் சுந்தர் சி மற்றும் ஜெய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படத்தை இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கி உள்ளார்.
“கே.ஜி.எஃப்
சேப்டர்
3“…
முக்கிய
தகவலை
சொன்ன
படக்குழு…
குஷியில்
ரசிகர்கள்
!
இப்படத்தை சுந்தர் சியின் அவ்னிசினி மேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் மே மாதம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்
விஜய்யின் பகவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஜெய். இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த சென்னை 600028 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. பின்னர் சசிகுமார் இயக்கத்தில் சுப்ரமணியபுரம், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த எங்கேயும் எப்போதும், அட்லீ இயக்கிய ராஜா ராணி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் ஆனதால் நடிகர் ஜெய் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

சுந்தர் சி ஹீரோ
தற்போது இவர் கைவசம் அரை டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பட்டாம்பூச்சி. இப்படத்தை பத்ரி நாராயணன் இயக்கி உள்ளார். இதில், சுந்தர் சி, ஜெய், ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு நவ்நீத் இசையமைத்துள்ளார். இசக்கி கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

சைக்கோ வில்லன்
இந்த படத்தில் ஜெய் கொடூர சைக்கோ கொலைகாரனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் சுந்தர். சி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

ஊட்டியில் ஷூட்டிங்
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை இணைத்து ஒரு படம் இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இந்த படத்தில் அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் கடந்த மாதம் தொடங்கியது.