Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உதவித் திட்டங்களில் அவர்களையும் சேருங்கள்.. கவலையின்றி பசியாறுவர்.. நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை!
சென்னை: அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் நாட்டுப்புறக் கலைஞர்களையும் இசைக் குழுவினரையும் சேர்க்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா என்ற ஒற்றை வார்த்தை உலக மக்களையே மிரட்டி வருகிறது. உலகம் முழுக்க இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்திற்கு இந்தியாவிலும் இதுவரை 19 பேர் பலியாகியிருக்கின்றனர். 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதோடு மக்களின் அன்றாட தேவைக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசும் அன்றாட வேலை, தினக்கூலியை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு உதவித்திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள்.அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில்,அவர்களும் கவலையின்றி பசியாறுவர்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 28, 2020
அதில், தமிழகத்தில் இருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள். அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில், அவர்களும் கவலையின்றி பசியாறுவர் என தெரிவித்துள்ளார்.