Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
பிரதமரின் சுய ஊரடங்கு கோரிக்கை.. நடிகர் கமல்ஹாசன் ஆதரவு.. ரஜினி உட்பட நண்பர்களுக்கும் அழைப்பு!
சென்னை: கொரோனாவுக்கு எதிரான பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு கோரிக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் உலக நாடுகள் பலவும் ஸ்தம்பித்து போயிருக்கிறது. உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
அரசு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 31ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. கோவில்கள், தேவாலயங்கள், மற்றும் மசூதிகள் உள்ளிட்டவற்றில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மக்கள் கூடும் இடங்களை மூட வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை கூறி வருகின்றனர்.
பிரதமர் கோரிக்கை
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் முக்கியமான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுது போக்கு பூங்காக்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 22ஆம் தேதி மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
சுய ஊரடங்கு
வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் 5 மணிக்கு வீட்டு வாயில்களில் நின்று கைகளை தட்டியும் மணியோசை எழுப்பியும் நன்றி கூற வேண்டும் என்றும் கூறினார். பிரதமர் மோடியின் இந்த கோரிக்கைக்கு பலரும் வரவேற்பும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
|
ஆதரவு தருகிறேன்
அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நம்முடைய பிரதமரின் ஜனதா ஊரடங்கு உத்தரவுக்கான அழைப்புக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். இந்த அசாதாரண சூழ்நிலையில், நாம் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
|
ரஜினிக்கு அழைப்பு
இது நமக்கு ஏற்பட்ட ஒரு பேரழிவு, நாம் ஒற்றுமையாகவும் வீட்டிற்குள்ளும் இருப்பதன் மூலம் பாதுகாப்பாக இருக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் நான் எனது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் மக்களை 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 வரை ஜனதா ஊரடங்கு எனும் மக்களின் சுய ஊரடங்குக்கு ஆதரவு தர அழைக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, இளையராஜா, அனிருத், ஜிவி பிரகாஷ், ஜிப்ரான், தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.