லிங்குசாமி படத்தில் நான் வில்லனா... உண்மையை போட்டுடைத்த மாதவன்
சென்னை : தெலுங்கு நடிகர் ராம் போதினானியை வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் ஒன்றை இயக்க போவதாக டைரக்டர் லிங்குசாமி கூறி இருந்தார். இந்த படம் மே மாதம் துவங்குவதாக இருந்தது.

ஆனால் கொரோனா பரவல் தீவிரமடைந்ததாலும், லாக்டவுன் போடப்பட்டதாலும் வேறு வழியில்லாமல் இந்த படத்தின் வேலைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் மாதவனும், அருண் விஜய்யும் நடிப்பதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது.
இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ட்விட்டரில் பதிலளித்துள்ளார் மாதவன். லிங்குசாமியின் அடுத்த படத்தில் தான் நடிக்கிறேனா, இல்லையா என்பது பற்றிய உண்மையை அவரே தெளிவுபடுத்தி உள்ளார்.
இது பற்றி மாதவன் ட்விட்டரில் கூறுகையில், லிங்குசாமியுடன் இணைந்து பணியாற்ற மிகவும் விரும்புகிறேன் நான். அவர் ஒரு அற்புதமான, அன்பான மனிதர். துரதிஷ்டவசமாக சமீப காலமாக உலா வரும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை.
லிங்குசாமி படத்தில் நான் நடிப்பதாகவும், அந்த படத்தில் நான் வில்லன் வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுவது அனைத்தும் பொய்யான தகவல் என மாதவன் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
மலையாளத்தில் உருவான சார்லி படத்தை தழுவி தமிழில் எடுக்கப்பட்ட மாறா படத்தில் மாதவன் சமீபத்தில் நடித்திருந்தார். இதே போல் மாதவன் முதல் முறையாக தானே இயக்கி, நடித்துள்ள ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











