Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 7 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராணாவின் 'நான் ஆணையிட்டால்' படம் தமிழக அரசியலை பிரதிபலிக்கும் - வீடியோ!
சென்னை : தெலுங்கு நடிகர் ராணாவை வைத்து தமிழில் நான் ஆணையிட்டால் என்று எடுத்துள்ள படம் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அந்தப் படத்தின் இயக்குனர் தேஜா கூறியுள்ளார்.
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் மூலமும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் நடிகர் ராணா. அதனால் இவரது படத்திற்கு தமிழிலும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தற்போது ராணாவை வைத்து தெலுங்கில் எடுக்கப்படும் படங்கள் கூட தமிழுக்கு ஏற்ற அம்சங்களையும் உள்ளடக்கியவாறு தயாராகின்றன. அப்படி தெலுங்கில் 'நேனே ராஜூ நேனே மந்திரி' என்கிற பெயரில் உருவாகியுள்ள படம் தான் தமிழில் நான் ஆணையிட்டால் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.
காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்கியுள்ளார். இதில் ராணா பக்கா அரசியல்வாதியாக நடித்துள்ளார். தெலுங்கில் இருந்து எடுக்கப்பட்ட கதையாக இருந்தாலும் தமிழ் படத்தின் மசாலா இருக்க வேண்டும் என்பதற்காக காமெடி நடிகர் மயில்சாமி, சதீஷ் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டு படம் மறுபடப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குனர் தேஜா இந்த படத்தில் இருக்கும் வசனங்கள் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றதாக இருக்கும். ஹீரோ ராணாவை பார்த்து நான் சி.எம் என்பதை மறந்துவிடாதே என்கிறது முதல்வர் கேரக்டர் சொல்ல, அதற்கு ராணா நூறு எம்.எல்.ஏக்களை கொண்டுபோய் ஸ்டார் ஹோட்டல்ல அடைச்சு வச்சா சாயந்திரத்துக்குள்ள நானும் சி.எம் தாண்டா" என கடந்த சில மாதங்களுக்கு முன் கூவத்தூரில் நடந்த அரசியல் கூத்தை விமர்சித்துள்ளோம்.
இந்த காட்சிகளையும் வசனங்களையும் கடந்த வருடமே படமக்கிவிட்டேன். ஆனால் அந்த நிகழ்வுகள் தற்போது உண்மையாகவே நடந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.