Don't Miss!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பொன்னியின் செல்வனுக்காக ரயிலில் பயணித்த மணிரத்னம்...செல்ஃபியை பகிர்ந்த ரகுமான்
சென்னை : மணிரத்னம் இயக்கும் வரலாற்று படமான பொன்னியின் செல்வனின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 5 பாகங்களான வெளிவந்த பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்படும் இந்த படம் ஒரே சமயத்தில் 2 பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.
இரண்டு பாகங்களும் நிறைவடையும் நிலையில் உள்ளதாம். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த டாப் நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பதால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தை டப் செய்து வெளியிடுவதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் ஜெயம் ரவியும், விக்ரமும் ஏற்கனவே தங்களின் போஷனை முடித்து விட்டதாக ஹாட் அப்டேட் கொடுத்து விட்டனர். அதிலும் பொன்னியின் செல்வன் கேரக்டரில் ஜெயம் ரவியும், ஆதித்ய கரிகாலன் ரோலில் விக்ரமும், வந்திய தேவன் ரோலில் கார்த்தியும் நடிப்பது உறுதியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் தனது போஷனை முடித்து விட்டதாக மிக உருக்கமான பதிவுடன் ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் படத்தை முடித்து விட்டு, அடுத்த படத்திற்காகவும் தயாராகி வருகிறார் ரவி.
இந்நிலையில் பிரபல நடிகர் ரகுமான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிரத்னத்துடன் எடுத்த செல்ஃபி ஒன்றை பகிர்ந்துள்ளார். அத்துடன், குவாலியரில் இருந்து இந்தூருக்கு ரயிலில் செல்கிறோம். கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு ரயிலில் பயணம் செய்கிறேன்.
பழைய நினைவுகள் திரும்ப வருகின்றன. எனது வேடிக்கையான குட்டி கதைகளை மணிரத்னம் மற்றும் ரவிவர்மனுடன் பகிர்ந்து கொண்டேன். இரண்டிற்கும் இடையில் உள்ள மகேஷ்வருக்கு செல்கிறோம். அங்கிருந்து 2 மணி நேரம் சாலை வழியாக செல்ல வேண்டும் பொன்னியின் செல்வன் ஷுட்டிங்கிற்காக என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் மதுராந்தகன் ரோலில் தான் ரகுமான் நடிக்கிறாராம். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
15 வயது முதல் 51 வயது வரை.. 21 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல ஆபாச பட நடிகர்.. பகீர் புகார்!