Just In
- 34 min ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 55 min ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 1 hr ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
- 1 hr ago
கமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்!
Don't Miss!
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனாவில் இருந்து குணமான சரத்குமார்.. காஞ்சி காமாட்சியம்மன் கோவில் தம்பதி சகிதமாக தரிசனம்!
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமானதை தொடர்ந்து நடிகர் சரத்குமாரும் நடிகை ராதிகாவும் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

நடிகர் சரத்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அச்சச்சோ.. லீக்கானதா மாஸ்டர் படத்தின் கதை? குடிக்கு அடிமையான விஜய்.. வைரலாகும் 'குட்டி' ஸ்டோரி!
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதி சரத்குமார் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

10 நாட்களுக்கு தனிமை
இதனை அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி அறிக்கையாக வெளியிட்டு அறிவித்தார். இருப்பினும், 10 நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று தெரிவித்த அவர், மருத்துவர்களுக்கும் நன்றி கூறினார்.

மாலையும் கழுத்துமாக..
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமாகி திரும்பி வந்த சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் வழிபாடு செய்துள்ளார். அங்கு உள்ள கோவிலில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ராதிகா
கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி இருவரும் மாஸ்க் அணிந்து வழிபாடு செய்கின்றனர். மேலும் இதுகுறித்து நடிகை ராதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் வழிபாடு செய்யும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

ஆத்மாக்களுக்கு நன்றி
அதில் காஞ்சி காமாட்சியின் ஆசிர்வாதம் பெற கோவிலுக்கு வந்துள்ளோம். சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அத்தனை மதங்களின் அற்புதமான ஆத்மாக்களுக்கு நன்றி. கொரோனாவில் இருந்து சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.