twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “கடவுள் பக்தி.. இந்து மதம்..” சூர்யா - ஜோ திருமண சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகுமார்!

    தனது கடவுள் நம்பிக்கை குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

    |

    Recommended Video

    சூர்யா - ஜோ திருமண சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகுமார்! அதிரடி வீடியோ

    சென்னை: அடுத்தவர்களை நேசிப்பவர்களும், அவர்களுக்கு உதவி செய்பவர்களும் தான் உண்மையான பக்தி மான் என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    சமீபகாலமாக சமூக வலைதளங்களில் சிவகுமார் பற்றியும், அவர் குடும்பத்தினர் பற்றியும் சில விரும்பத்தகாத செய்திகள் வெளியாகியபடி உள்ளன. குறிப்பாக ஜோதிகாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. மேலும், அவர்களுடைய கடவுள் பக்தி மற்றும் மதம் தொடர்பாகவும் இணையத்தில் சில வதந்திகள் பரவியது.

    இந்நிலையில், இந்த செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சிவகுமார் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கடவுள் நம்பிக்கை எப்படிபட்டது என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    நான்தான் வாய்ப்பு கொடுத்தேன்.. இப்போ என் மார்க்கெட்டே போச்சு.. இளம் நடிகரால் ஷாக்கான மாஸ் ஹீரோ!நான்தான் வாய்ப்பு கொடுத்தேன்.. இப்போ என் மார்க்கெட்டே போச்சு.. இளம் நடிகரால் ஷாக்கான மாஸ் ஹீரோ!

    கடவுள் நம்பிக்கை

    கடவுள் நம்பிக்கை

    அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா?. சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், விநாயகன், லக்ஷ்மி, சரஸ்வதி, காமாட்சி, மீனாக்ஷி என சாமி கும்பிடுபவர்கள் நம் நாட்டில் பல கோடி பேர் இருக்கிறார்கள். அல்லாவையும், ஏசுவையும் கும்பிடுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள்.

    மகாத்மா காந்தி வரலாறு

    மகாத்மா காந்தி வரலாறு

    கடவுளுக்கு வடிவம் இல்லை. ஆண், பெண் என்ற பேதம் இல்லை! ‘கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம்; விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல' என்று சொன்னவர் மகாத்மா காந்தி. ஆனால், அவரே உயிர் துறக்கும்போது ‘ஹேராம்' என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதாவது, அவர் ராமனை வணங்கியிருக்கிறார்.

    முருக பக்தர்

    முருக பக்தர்

    நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், என்னுடைய அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும், உபவாசம் இருந்து, பழனி மலைக்குச் சென்று, திருப்புகழ் மொத்தப் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி சாமி கும்பிட்டுத் திரும்பி வருவார். நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன்.இப்பொழுதும் எங்கள் வீட்டுப் பூஜையறையில் எல்லா சாமி படங்களும் இருக்கின்றன.

    ராமாயணம் - மகாபாரதம்

    ராமாயணம் - மகாபாரதம்

    இந்திய மண்ணுக்கு பெருமை சேர்ப்பது ராமாயணம், மகாபாரதம். அந்த மாபெரும் காவியங்களின் முழுக்கதையையும் பாடல்களுடன், இரண்டு மணி நேரம் 5000 பேருக்கு முன்னிலையில் உரையாக நிகழ்த்தியிருக்கிறேன். ‘யு ட்யூப்'பில் இப்பொழுதும்கூட அதை நீங்கள் பார்க்கலாம்.

    உண்மையான பக்தி

    உண்மையான பக்தி

    உண்மையான பக்தி என்பது ‘அடுத்தவரை நேசித்தல், அவர்களை சமமாக மதித்தல், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு ஓடிச்சென்று உதவி செய்தல்'. இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான்; உயர்ந்த பக்திமான்! எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன.'' இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    Actor Sivakumar released a video claiming he is a true beliver of god. He compled to explain this as a news started spreading social medias that he and his family members are atheist.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X