twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அனைவரும் தடுப்பூசி கட்டாயமாக செலுத்தணும்...சூரி அட்வைஸ்

    |

    சென்னை : சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் கொரோனா பேரிடர் காலத்தில் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி கலந்துக்கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.

    Actor Soori urged to vaccinate everyone

    பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சூரி, கொரோனா இரண்டாம் அலை மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊடகவியலாளரின் பணி தியாகத்திற்குரிய பணி . அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஊடகத்துறையினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.

    கொரோனா 3-வது அலை வரவேக்கூடாது. தடுப்பூசி கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டும். 100% பேரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். சமீபத்தில் சூரி தனது மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

    சூரி தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சூரி போலீஸ் ரோலிலும், விஜய் சேதுபதி நக்சலைட் ரோலிலும் நடித்து வருகிறார்.

    விஜய் டிவி ரோபோ ஷங்கரின் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பே படங்களில் நடித்துள்ளாரா வைரலாகும் புகைப்படம்!விஜய் டிவி ரோபோ ஷங்கரின் மனைவி 20 ஆண்டுகளுக்கு முன்பே படங்களில் நடித்துள்ளாரா வைரலாகும் புகைப்படம்!

    திரை பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டு, அந்த ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    English summary
    Actor Soori participated in the function of distributing relief supply items to media persons. After that he spoke to media and urged to vaccinate everyone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X