Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. தேமுதிக தனித்துப் போட்டி.. வேட்பாளரை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்!
- Lifestyle
சப்பாத்தி, பூரிக்கு சூப்பராக இருக்கும்... ஆலு பட்டர் மசாலா
- Sports
ஒரே போட்டியில் பல மாற்றங்கள்.. நியூசி, உடனான 3வது ODI போட்டி..ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா பலே திட்டம்
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
சில கேரக்டர்கள் நம்மை டேமேஜ் செய்யும்.. ஆனால் அது தேவைப்படுது.. ரோலக்ஸ் குறித்து பேசிய சூர்யா!
சென்னை : நடிகர் சூர்யா அடுத்தடுத்த சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், கோவாவை தொடர்ந்து தற்போது சென்னையில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் களைகட்டியுள்ளது.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தொடர்ந்து தன்னுடைய வித்தியாசமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்கள் கவர்ந்து வருவது தெரிந்த விஷயம்தான். இவரது முந்தைய படங்கள் சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நிலையில் தற்போது சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

சூர்யா 42 படம்
இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ள நிலையில், அடுத்ததாக இலங்கைக்கு படக்குழு பயணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வரலாற்று பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்தப் படத்தில் 5 வித்தியாசமான கெட்டப்புகளில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.

சூர்யாவின் மிரட்டல் கேரக்டர்
இந்தப் படத்திற்கு முன்னதாக கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். படத்தின் க்ளைமாக்சில் 4 நிமிடங்களே வரும் இந்தக் கேரக்டர் படத்தில் மிரட்டியது. படத்தின் வெற்றிக்கு இந்த கேரக்டரும் முக்கியமான காரணமாக அமைந்தது. சூர்யாவை இப்படிப்பட்ட வில்லன் கேரக்டரில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தனக்கு இதுவும் வரும் என்று நிரூபித்திருந்தார் சூர்யா.

ரோலக்ஸ் கேரக்டருக்கான காரணம்
இந்நிலையில் பிரபல வாரயிதழுக்கு சூர்யா அளித்துள்ள பேட்டியில், முழுக்க முழுக்க நெகட்டிவ் ஷேடில் அமைந்துள்ள ரோலக்ஸ் கேரக்டரை தான் ஏற்று நடித்ததற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரோலக்ஸ் கேரக்டரை அதிகப்படியான ரசிகர்கள் விரும்பியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சில சமயங்களில் இதுபோன்ற கேரக்டர்கள் நம்மை டேமேஜ் செய்தாலும், ஒரு நடிகராக இவை தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
விக்ரம் படத்தில் சில நிமிடங்களே ரோலக்ஸ் வந்தாலும், படத்தின் அடுத்த பாகத்திற்கான லீடாக இந்த கேரக்டர் அமைந்துள்ளது. தற்போது தளபதி 67 படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்கவுள்ளார். தொடர்ந்து அவர் விக்ரம் படத்தின் அடுதத பாகத்தையும் இயக்கவுள்ளதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சூர்யாவின் கேரக்டர் பிரதானமாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக தற்போதே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
-
Varisu vs Thunivu: 2வது வாரத்திலும் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளிய வாரிசு.. வசூல் விவரம் இதோ!
-
பிக் பாஸ் குயின்ஸியின் மாமாக்குட்டியான மணிகண்டன்.. ரெண்டு பேரும் செம டான்ஸ்.. தீயாய் பரவும் வீடியோ!
-
விக்ரமா...அசீமா டைட்டில் வின்னர் யார்?...பிரம்மாண்டமாக தொடங்கியது பிக் பாஸ் கிராண்ட் பினாலே!