Don't Miss!
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எனக்கே கண்ணிவெடி வைக்கிறாங்க.. இவருக்கு எத்தனை ஏவுகணை விட்ருப்பாங்க: கமல் 60ல் வடிவேலு கலகல!
Recommended Video
சென்னை: கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் நடிகர் வடிவேல் பேசிய கலகலப்பான பேச்சு வைரலாகி வருகிறது.
நடிகர் கமல்ஹாசனின் 65வது பிறந்த நாள் மற்றும் சினிமாவில் அவரது 60 ஆண்டுகால சாதனையை பாராட்டும் வகையில் உங்கள் நான் எனும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
அவர்கள் கமலுக்கு வாழ்த்தையும் அவர் கடந்து வந்த பாதையையும் தமிழ் சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவு கூர்ந்தனர். விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி என பலரும் கமலின் சாதனையை பாராட்டி பேசினர்.
கண்ணிவெடி வைக்கிறாங்க
இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேல் கலந்துகொண்டார். அப்போது கமல் குறித்து பேசிய அவர், எனக்கே கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வைக்கிறாங்க.. கமல் இவ்ளோ பெரிய ஆளா வளர்ந்திருக்காருக்கு அவருக்கு எத்தனை ஏவுகணை விட்ருப்பாங்க..
எல்லா வித்தையும்
எத்தனை பாம் வச்சுருப்பாங்க..தவ்வுற இடத்துல தவ்வுறதும் முங்குற இடத்துல முங்குறதும், பறக்குற இடத்துல பறக்குறதும், மறையிற இடத்துல மறையிறதும்னு எல்லா வித்தையும் கத்துக்கிட்டு இன்னைக்கு இந்த இடத்துல நிக்கிறாருன்னா.. எல்லாத்தையும் கடந்து ஜெயிக்கிறாரு.. இவர மாதிரி ஒரு உதாரணமே கிடையாது.
என்னப்பா தெரியும்?
நான் ராஜ்கிரண் சார் மூலமா திரையுலகுக்கு வந்தேன். அதுக்கப்புறம் அண்ணன் கமலோட சேர்ந்து இரண்டு படங்கள்ல நடிக்குற வாய்ப்ப ஆர்வி உதயக்குமார் சார் கொடுத்தார். சிங்காரவேலன் படத்தில் கமலுடன் நடிக்கும்போது அண்ணன் கமல் என் தோளில் கைபோட்டுக்கொண்டு, உனக்கு என்னப்பா தெரியும். எந்த ஊரு நீ? என்றெல்லாம் கேட்டார்.
தேவர்மகன் படம்
நான் ஓரளவு பாடுவேன், நடிப்பேன்னு சொன்னேன். உடனே அவர், நாளைக்கி காலைல என்னோட ராஜ்கமல் பிலிம்ஸ் ஆபீசுக்குப் போ. அங்கே டி.என்.எஸ்.னு இருப்பாரு. அவர் அட்வான்ஸ் தருவாரு. வாங்கிக்கோ. என் சொந்தப்படத்துல, தேவர்மகன்ங்கற படத்துல நீ நடிக்கிறேன்னார். ரொம்ப நன்றி சார் என்று சொன்னேன்.
ஐயாயிரம் ரூபாய் செக்
என்னை மறுநாள்தான் போகச் சொன்னார். ஆனால் அந்த கேப்ல வேற எவனாவது புகுந்துட்டா என்ன பண்றது? அதனால ஷூட்டிங் முடிஞ்ச கையோட, மாலை ஆறு மணிக்கெல்லாம் நேராக ராஜ்கமல் அலுவலகம் போய்விட்டேன். அங்கே டி.என்.எஸ். அவர்களைச் சந்தித்து கமல் சார் சொன்னத சொன்னேன். உங்களை நாளைக்குத்தானே வரச்சொல்லிருந்தாரு கேட்ட அவரு, உடனே கமலுக்கு போன் போட்டு பேசிட்டு எனக்கு ஐயாயிரம் ரூபாய் செக் கொடுத்தார்.
|
நேத்து நைட்டே விடிஞ்சிருச்சு
மறுநாள் கமலுடன் சிங்கார வேலன் ஷூட்டிங். என்ன வடிவேலு, விடிஞ்சதும் போங்கன்னுதானே சொன்னேன். நேத்து நைட்டே போயிட்டீங்கன்னு கேட்டாரு கமல், அதுக்கு எனக்கு நேத்து நைட்டே விடிஞ்சிருச்சு சார்னு சொன்னேன். அதேபோல், இப்போது இந்த மேடையில் ஏறியிருக்கிறேன். இனி எனக்கு விடிவுகாலம்தான் என்று கூறினார் வடிவேலு.
|
கலகலப்பான பேச்சு
வடிவேலுவின் இந்த பேச்சை ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் ரசித்தனர். வடிவேலுவின் இந்த கலகலப்பான பேச்சு வைரலாகி வருகிறது.