Don't Miss!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ஆன்மீகமும் அன்பும் இருக்கு.. நிச்சயம் கொரோனா வராது.. வையாபுரி டிப்ஸ்!
சென்னை : நடிகர் வையாபுரி கொரோனா பற்றிய விழிப்புணர்வு காணொலி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
நடிகர் வையாபுரி தமிழ் சினிமா ரசிகர்களால் சிறந்த குணசித்திர நடிகராக அறியபட்டவர். இவர் அதிகபடியான காமெடி கதாபாத்திரங்களை எடுத்து நடித்தவர். சிறந்த நகைச்சுவை நாயகனாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர். நடிகர் வையாபுரியும் மற்ற நடிகர்களை போல கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசிய காணொலி ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த காணொலியில் நடிகர் வையாபுரி நாம் ஆன்மீகமும் அன்பும் நிறைந்த மக்களாக இருக்கிறோம் இதனால் நமக்கு கட்டாயம் கொரோனா தொற்று பரவாது என கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது இதனால் யாரும் பயப்பட தேவையில்லை நம் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார் .
மேலும் நாம் சுத்தம் நிறைந்த மக்கள் நமக்கு இந்த நோய் அடிப்படையில் வராது இருந்தும் நமது ஊர்களில் கடைகள் அனைத்திலும் கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்து இருக்கிறார்கள். இதனால் நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை என்று தைரியமாக கூறியுள்ளார் .
நம் பண்பாடை பின்பற்றி அனைவருக்கும் கைகூப்பி வணக்கம் தெரிவியுங்கள் . இதை போல பல விஷயங்களை முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்து இருக்கிறார்கள். உதராணத்திற்கு நம் முன்னோர்கள் அனைவரும் வெளியே சென்று விட்டு வந்தால் வீட்டுக்குள் வரும் போது கை கால் கழுவி விட்டு தான் உள்ளே வர சொல்வார்கள். அதை நாம் தற்போது தவறாமல் பின் பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த காணொலியில் மேலும் சில இயற்கையான அறிவுரைகளை கூறியுள்ள வையாபுரி குழந்தைகளுக்கு காலையும் இரவும் உப்பு போட்டு வாய் கொப்பிளிக்க அறிவுரை கூறியுள்ளார். மேலும், இதே நேரத்தில் நாம் இஞ்சி , கடுகு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டு இருப்பது நன்று இருந்தும் எல்லோரும் சொல்கிறார்கள் என்று ஒரே அடியாக அறைத்து குடிக்காதீர்கள் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.
இறுதியாக பல வதந்திகள் வாட்சாப்பில் பரவி வருகிறது அனைத்தையும் நம்பி ஏமாந்து விட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். மேலும் ரங்கநாதன் தெரு காலியாக இருக்கிறது அதை பார்க்க சில கூட்டம் கூடுகிறது. அதை பார்க்க செல்கிறோம் என எதிலும் மாட்டிகொள்ளாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளார்.