Just In
- 6 min ago
ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
- 8 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 8 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 10 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆயிரத்தில் இருவர்... இது ‘களவுக் கதை’ இல்லை... சரணின் ‘கனவுக் கதையாம்’!
சென்னை: சரணின் இயக்கத்தில் வினய் நாயகனாக இரட்டை வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘ஆயிரத்தில் இருவர்.
காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, அசல் என முன்னணி நாயகர்களை வைத்து படம் இயக்கியவர் இயக்குநர் சரண். இவர் தற்போது வினய் நாயகனாகவும், ஸ்வஸ்திகா, சாமுத்ரிகா, கேஷா என மூன்று அழகு தேவதைகள் நாயகிகளாகவும் நடிக்கும் ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்திற்கான கதைக்கரு சரணுக்கு கனவில் கிடைத்ததாம். ஒருநாள் அதிகாலை 3 மணி அளவில் தனக்கு வந்த கனவிற்கு உருவம் கொடுத்து படமாக்கியுள்ளாராம்.

வயிற்றுக்குள்ளேயே மோதல்...
அம்மா வயிற்றுக்குள் இருக்கும் இரட்டையர்கள் ஒருவருக்கொருவர் ஏசியபடி மோதிக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை கம்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் இப்படத்தில் காட்டி இருக்கிறார்களாம்.

இரட்டையர்கள்...
இந்த சண்டை போடும் இரட்டையர்களாக, இப்படத்தின் மூலம் முதன்முறையாக இரட்டை வேடத்தில் வினய் நடித்துள்ளார்.

ஐ படம் மாதிரி...
ஷங்கருக்கு ஐ படம் எப்படியோ அப்படித்தான் தனக்கும் இந்த ‘ஆயிரத்தில் இருவர்' என இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இயக்குநர் சரண்.

வாயை மட்டும் நம்பி...
மேலும், டி.ராஜேந்தர் வசனம் எழுதியதே இல்லை. வாயை எடுத்துக் கொண்டு மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போவார். வசனங்கள், காட்சி படமாகும் போது தான் வாயால் சொல்லப் படும். டேக்குக்கு டேக் வசனம் மாறிக் கொண்டே இருக்கும்.

டி.ஆர். மாதிரி திறமைசாலி இல்லை...
நான், டி.ஆர். போல திறமைசாலி இல்லை. இருப்பினும் பேனா வாயை ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பெரும்பாலும் திறப்பேன். ஆனால், எழுதி முடிப்பதற்காக படப்பிடிப்பு காத்திருக்காது.

காலி மண்டை...
அது பாட்டுக்கு டாணென்று நொடி பிசகாமல் நடக்கும். எனவே காலி மண்டையுடன் தான் படப்பிடிக்கு கிளம்புவேன்' என இவ்வாறு அப்பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.