Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அன்புச்செழியனுக்கு ஆதரவாக யார் வந்தாலும் விட மாட்டோம்.. அசோக்குமார் மரணம் குறித்து விஷால் பேட்டி
சசிகுமார் உறவினர் அசோக்குமார் மரணத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷால் பேட்டி அளித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: சசிகுமார் உறவினர் அசோக்குமார் மரணத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷால் பேட்டி அளித்து இருக்கிறார். அசோக்குமார் தன் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கும் அன்புசெழியன் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் தன் தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தன் தற்கொலைக்கு அன்புசெழியன் என்பவர்தான் காரணம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் இவரது மரணத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விஷால் கோரிக்கை விடுத்து இருக்கிறார். மேலும் அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமான அன்புசெழியன் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அதே போல் ''கந்துவட்டியால் நான், பார்த்திபன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டோம். ஆகவே அன்புச்செழியனுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என யார் வந்தாலும் விட மாட்டோம்'' என்று கோவமாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார்.
மேலும் சினிமா துறையில் கந்துவட்டியால் கஷ்டப்படும் பலரின் கடனை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைவரும் சேர்ந்து அடைக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.